சென்னை, ஜூன் 19- வட தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு வெப்பநிலை தொடர்ந்து நீடிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் தெரிவித்துள்ளார். கோடை வெயில் முடிந்து 3 வாரம் ஆகியும் தமிழகம் முழு வதும் வெயில் கொளுத்துகிறது. தென்மேற்கு பருவமழை தாமதம், அரபிக் கடலில் உருவான வாயு புயல் ஆகிய கார ணங்களால் வெப்ப நிலை மேலும் அதிகரித்தது. குறிப்பாக வடதமிழகத்தில் கடந்த 2 வாரமாக வெப்ப நிலை சராசரியை விட மிக அதிகமாக உள்ளது. 12 இடங்களில் 100 டிகிரிக்கு மேல் வெயில் பதிவானது. சென்னை மீனம்பாக்கம், திருத்தணியில் அதிகபட்சமாக தலா 107 டிகிரி வெயில் பதி வானது. நுங்கம்பாக்கத்தில் 106 டிகிரி, மதுரை விமான நிலையம், நாகப்பட்டினத்தில் தலா 105 டிகிரி, மதுரை தெற்கு, வேலூரில் தலா 104 டிகிரி, திருச்சியில் 103 டிகிரி, பரங்கிப் பேட்டையில் 102 டிகிரி, கடலூர், கரூர், பரமத்தி, தொண்டியில் தலா 100 டிகிரி வெயில் பதிவானது. புதுச்சேரி, காரைக்கா லில் தலா 102 டிகிரி வெயில் பதிவானது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் கூறியதாவது:- வடதமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு வெப்பநிலை தொடர்ந்து நீடிக்கும். தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை, நீலகிரி, தேனி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்க ளில் மிதமான மழை பெய்யும் வாய்ப்புள்ளது. தமிழகத்தில் 13 மாவட்டங்களில் அனல் காற்று வீசவும் வாய்ப்புள்ளது. சென்னை, திருவள்ளூர், வேலூர், மதுரை, திருவண்ணா மலை, காஞ்சிபுரம், கடலூர், விழுப்புரம், நாகப்பட்டினம், அரியலூர், பெரம்பலூர், கரூர், திருச்சி ஆகிய மாவட்டங்க ளில் ஓரிரு இடங்களில் அனல் காற்று வீசும். வடக்கு வங்கக் கடல் பகுதியில் அடுத்த 3 முதல் 4 நாட்க ளில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்பு உள்ளது. மத்திய அரபிக்கடலில் பல பகுதிகளில் அடுத்த 3 முதல் 4 நாட்களில் தென்மேற்கு பருவ மழை தீவிரமடைய சாதகமான சூழல் உள்ளது. தென் அரபிக்கடல் பகுதியில் பருவமழை மிதமாக வலுவடைய வாய்ப்பு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.