tamilnadu

img

தலித் ஊராட்சித் தலைவருக்கு சாதி ரீதியாக நெருக்கடி - ராஜினாமா செய்வதாக அறிவிப்பு

மானாமதுரை ஒன்றியத்தில் தலித் ஊராட்சி மன்றத் தலைவருக்கு சாதி ரீதியாக நெருக்கடி தரப்படுவதால்,  ராஜினாமா செய்யப்போவதாக அறிவித்துள்ளார்.

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே கால் பிரவு ஊராட்சி மன்ற தலைவராக இருப்பவர் ராஜேஸ்வரி பாண்டி (44). போட்டியின்றி தலைவர் பதவிக்கு தேர்வு செய்யப்பட்டவர். துணை தலைவராக அதிமுக வைச் சேர்ந்த நாகராஜன் உள்ளார். 6 உறுப்பினர்களைக் கொண்ட இந்த ஊராட்சியில் தலைவர் ராஜேஸ்வரிக்கு யாரும் ஒத்துழைப்பு கொடுப்பதில்லை.

தலித் என்பதால் கடந்த 11 மாத காலமாக ஊராட்சி மன்ற தலைவரை புறக்கணித்தே வந்துள்ளனர். கூட்டங்களுக்கு அழைப்பதில்லை. தலைவர் ராஜேஸ்வரி வந்தால் மற்றவர்கள் வெளியேறி விடுவார்கள். திட்டமிட்டு நடைபெறும் எந்த  திட்டங்களுக்கும் அழைப்பதில்லை. காசோலை புத்தகம் துணை தலைவர் வசமே உள்ளது. புறக்கணிப்பு குறித்து பல முறை அதிகாரிகளிடம் முறையிட்டும் எந்த நடவடிக்கையும் இல்லை. இதனால் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டும் மக்களுக்கு நல்லது செய்ய முடியவில்லை எனக் கூறி இன்று பதவியை ராஜினாமா செய்யப் போவதாக அறிவித்தார். அதிமுக வைச் சேர்ந்த துணைத் தலைவரான நாகராஜ், தரும் நெருக்கடிகள், தொடர்ந்து சாதி ரீதியாக அவமானப்படுத்தப் படுவதால் வேறு வழியின்றி பதவியை ராஜிநாமா செய்யப் போவதாக தெரிவித்துள்ளார். தற்போது ஆட்சியர் ஜெயகாந்தன் தலைமையில் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.