மாணவர், வாலிபர் சங்க மாவட்ட மாநாடுகள்
வரவேற்புக்குழு அமைப்பு
சேலம், ஜூன் 14- இந்திய மாணவர் சங்கத்தின் சேலம் மாவட்ட மாநாடு மற்றும் தருமபுரி மாவட்ட வாலிபர் சங்க மாநாட்டிற்காக வரவேற்புக்குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்திய மாணவர் சங்கத்தின் சேலம் மாவட்ட 25 ஆவது மாநாடு, ஆகஸ்ட் மாதம் நடைபெற உள்ளது. மாநாட்டை வெற்றிகரமாக நடத்து வதற்காக வரவேற்புக்குழு அமைப் புக்கூட்டம், மாவட்ட துணைத்தலை வர் அபிராமி தலைமையில் வெள்ளி யன்று எருமாபாளையத்தில் நடை பெற்றது. அப்போது மாவட்ட மாநாட்டிற்கான இலட்சிணை யினை, மாணவர் சங்கத்தின் முன் னாள் மாநில துணைத்தலைவ ரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மாநில செயற்குழு உறுப்பின ருமான செ.முத்துக்கண்ணன் வெளி யிட்டார். இதன்பின் வரவேற்புக் குழு தலைவராக ஜெ.ஷேக் அப் துல்லா, செயலாளராக ஆர்.ராமச் சந்திரன், பொருளாளராக ஜி.சுல் தான் உள்ளிட்ட 25 பேர் கொண்ட வர வேற்புக்குழு அமைக்கப்பட்டது. இந்நிகழ்வில், மாணவர் சங்க மாவட்டத் தலைவர் அருண்குமார், செயலாளர் பவித்ரன், துணைத்த லைவர் கோகுல், தமுஎகச மாவட் டச் செயலாளர் ஜி.கண்ணன், அறி வியல் இயக்க மாவட்டச் செயலா ளர் சுரேஷ்குமார், சிபிஎம் கிழக்கு மாநகரச் செயலாளர் பச்சமுத்து, வாலிபர் சங்க மாவட்டச் செயலா ளர் பெரியசாமி உட்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில், மாணவர் சங்க மாவட்ட இணைச்செயலாளர் டார்வின் நன்றி கூறினார். தருமபுரி இதேபோன்று, இந்திய ஜனநா யக வாலிபர் சங்கத்தின் தருமபுரி மாவட்ட 16 ஆவது மாநாடு ஆக.1,2 ஆகிய தேதிகளில் நடைபெறவுள் ளது. ஆக.1 ஆம் தேதி கடத்தூரில் பேரணி – பொதுக்கூட்டமும், ஆக.2 ஆம் தேதி பொம்மிடியில் பிரதிநிதி கள் மாநாடும் நடைபெறவுள்ளது. இந்நிலையில், இந்த மாநாட்டை வெற்றிகரமாக நடத்த வரவேற்புக் குழு அமைப்பு கூட்டம், பாப்பி ரெட்டிப்பட்டி அருகே உள்ள பி. பள்ளிப்பட்டியில் சனியன்று நடை பெற்றது. இக்கூட்டத்திற்கு வாலிபர் சங்க மாவட்டத் தலைவர் ம.குறள ரசன் தலைமை வகித்தார். சிபிஎம் மாநிலக்குழு உறுப்பினர் ஏ.குமார், மாவட்டச் செயலாளர் இரா.சிசு பாலன், மாவட்ட செயற்குழு உறுப் பினர் எம்.மாரிமுத்து, விவசாயத் தொழிலாளர் சங்க மாவட்டச் செய லாளர் எம்.முத்து, மாதர் சங்க மாவட்டச் செயலாளர் ஆர்.மல் லிகா, மின் ஊழியர் மத்திய அமைப் பின் மாவட்டச் செயலாளர் தீ. லெனின் மகேந்திரன், தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்டப் பொரு ளாளர் கே.கோவிந்தசாமி, விவசா யிகள் சங்க மாவட்ட துணைத்தலை வர் எஸ்.தீர்த்தகிரி, வாலிபர் சங்க மாவட்டச் செயலாளர் எம்.அருள் குமார், மாணவர் சங்க மாவட்டச் செயலாளர் ஸ்டாலின் உட்பட பலர் பேசினர். இதையடுத்து வரவேற்புக் குழு தலைவராக சக்திவேல், செய லாளராக எம்.அருள்குமார், பொரு ளாளராக தி.வ.தனுசன் உள்ளிட் டோர் தேர்வு செய்யப்பட்டனர்.