tamilnadu

தீக்கதிர் விரைவு செய்திகள்

வாகன நிறுத்தக் கட்டணங்கள் அதிரடி உயர்வு: ரயில் பயணிகள் கடும் அதிருப்தி

திருப்பூர், ஜூன் 14- திருப்பூரில் புதிதாகத் திறக்கப்பட்ட ரயில் நிலைய வாகன நிறுத்தும் பகுதியில் கட்டணங்கள் அபரிமிதமான அளவில் உயர்த்தப்பட்டிருப்பது பொதுமக்கள் மற்றும் ரயில் பயணி களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.  திருப்பூர் ரயில் நிலைய முதலாவது நுழைவு வாயில்  பகுதியில் மேற்கூரையுடன் அமைக்கப்பட்ட வாகன நிறுத்தப்  பகுதி 12 ஆம் தேதி முதல் பயன்பாட்டிற்கு வந்துள்ளது. அதில், கட்டணம் இரண்டு மடங்காக உயர்த்தப்பட்டுள்ளது. அதுவும் வாகனத்தின் சிசி அடிப்படையில் பிரித்துள்ளது விமர்சனத்திற்குள்ளாகியுள்ளது. இந்த கட்டணங்களை யார் நிர்ணயிப்பது என்கிற கேள்வி எழுந்துள்ளது. இது குறித்து ரயில் பயணிகள் கூறுகையில், திருப்பூரில் இருந்து ஈரோடு சென்று வருவதற்கே 2 மணி நேரத்திற்கு மேல் ஆகும் நிலையில், வாகன நிறுத்தக் கட்டணம் 2 மணி நேர கணக்கில் விதிக்கப்பட்டிருப்பது நியாயமற்றது. மேலும், இருசக்கர வாகனங்களை சிசி கணக்கில் பிரித்து கட்டணம் நிர்ண யித்திருப்பது எந்த அடிப்படையில் என்பது புரியவில்லை.பல மாதங்களாக பார்க்கிங் கட்டுமானப் பணிகள் நடைபெற்று  வந்ததால், வெயில் மற்றும் மழையில் வாகனங்களை நிறுத்தி வைப்பதற்கே கட்டணம் செலுத்த வேண்டிய நிலை இருந்தது. தற்போது புதிய கட்டணப் பட்டியல் அதைவிட பல மடங்கு உயர்த்தியுள்ளது மன உளைச்சலை ஏற்படுத்து கிறது. மாதாந்திர பேருந்து கட்டணம் இரு மடங்காக உயர்த் தப்பட்டிருப்பதும், தலைகவசம் பாதுகாப்புக்கு தனி கட்ட ணம் வசூலிக்கப்படுவதும், சிசி கணக்கு அடிப்படையில் கட்ட ணம்என பல வகையிலும் கொள்ளை அடிக்கும் வகையில்  கட்டணங்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக குற்றஞ்சாட்டினர். பொதுமக்களின் இந்த அதிருப்தியை ரயில்வே நிர்வாகம் கவனத்தில் கொண்டு, நியாயமான கட்டண விகிதங்களை நிர்ணயிக்க வேண்டும் என்பதே பயணிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது.

இன்று குரூப் 1 தேர்வு

திருப்பூர், ஜூன் 14- திருப்பூரில் டி.என்.பி.எஸ்.சி குரூப் 1 தேர்வு 10 மையங்க ளில் ஞாயிறன்று நடைபெற இருக்கிறது. இதில் 4300 பேர்  தேர்வு எழுத உள்ளனர். தமிழ்நாடு அரசு தேர்வாணையத்தால் நடத்தப்படம் குரூப் 1 பணியிடங்களுக்கான முதல் நிலை தேர்வு ஞாயி றன்று (இன்று) தமிழ்நாடு முழுவதும் நடைபெறுகிறது. திருப் பூர் மாவட்டத்தில் 10 தேர்வு மையங்களில் 16 தேர்வு அறைகளில் இந்த தேர்வு நடைபெறுகிறது. 4,303 தேர்வர்கள் தேர்வை எழுதுகின்றனர். இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் மற்றும் அரசு தேர்வுகள் துறை சார்பில் மேற் கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் தேர்வுக்கான வினாத்தாள்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சீல் வைக்கப்பட்ட அறையில் பாதுகாக்கப்பட்டு வருகிறது. துப்பாக்கி ஏந்திய காவலர் பாதுகாப்பு பணியில் ஈடுபட் டுள்ளனர். மேலும் அசம்பாவித சம்பவங்கள் ஏதும் நடைபெறா மல் இருக்கவும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தீய ணைப்புத் துறையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள னர். காலை அலுவலர்கள் முன்னிலையில் சீல் வைக்கப் பட்ட அறையில் இருந்து வினாத்தாள்கள் அந்தந்த தேர்வு மையங்களுக்கு காவல்துறை பாதுகாப்புடன் அனுப்பி வைக்கப்படும்.

மாணவர் சங்க போராட்டம் வெற்றி மாணவர் சேர்க்கை துவக்கம்

ஈரோடு, ஜூன் 14- மாணவர் சங்கத்தின் தொடர் போராட்டத்தின் விளைவாக முதற்கட்டமாக பாரதியார் பல்கலைக்கழக முதுகலைப்பட்ட மேற்படிப்பு விரிவாக்க மற்றும் ஆராய்ச்சி மையத்தில் மாணவர் சேர்க்கை தொடங்கியுள்ளது. பாரதியார் பல்கலைக்கழக முதுகலைப்பட்ட மேற்படிப்பு விரிவாக்க மற்றும் ஆராய்ச்சி மையம் ஈரோட்டில் செயல்பட்டு வருகிறது. இதில் எம்ஏ தமிழ், ஆங்கிலம், எம்எஸ்சி கணிதவியல், எம்பிஏ, எம்சிஏ மற்றும் எம்எஸ்சி கணிணி அறிவியல் ஆகிய முதுகலை பாடப்பிரிவுகளுக்கு நடப்பு கல்வியாண்டின் மாணவர் சேர்க்கை தொடங்கியுள்ளது. தகுதியுடைய மாணவர்கள் மேற்கண்ட பாடப்பிரிவுகளில் சேருவதற்கு https://b-u.ac.in/294/pg-centre-admission ஆன்லைன் மூலம் விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இது ஜூன் 12 ஆம் தேதி முதல் ஜூலை 31 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.  கடந்த 2013 லிருந்து செயல்பட்டு வரும் இந்நிறுவனத்திற்கு சொந்த கட்டடம் இல்லாத நிலையில் கடந்த சில மாதங்களாக மாணவர் சேர்க்கை அறிவிக்கப்படாமலிருந்தது. மேலும், மூடும் நடவடிக்கை மேற்கொண்டிருப்பதாகக் கூறப்பட்டது. இதனை எதிர்த்து இந்திய மாணவர் சங்கத்தினர் தொடர் போராட்டம் மேற்கொண்டனர். மேலும், உயர்கல்வித்துறை அமைச்சர் மற்றும் அதிகாரிகளிடம் மனு கொடுத்தது. முதலமைச்சரிடமும் முறையிடப்பட்டது. பல்வேறு அமைப்பினருடன் இணைந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டது. இந்நிலையில். மாணவர் சேர்க்கை குறித்து அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.