கோவை, ஜூலை 1 - கொரோனா வைரஸ் தாக்கம் கார ணமாக வாழைக்கு உரிய விலை கிடைக்காததால் கோவையைச் சேர்ந்த விவசாயி ஒருவர் தனது வாழைத் தோட்டத்துக்கு தீ வைத்த சம்பவம் வேதனையை ஏற்படுத்தி யுள்ளது. கோவை மாவட்டம், தொண்டா முத்தூர் பகுதியில் 500 ஹெக்டெர் பரப் பளவில் பூவன், நேந்திரன் கதளி உட் பட மூன்று ரக வாழை சாகுபடி நடக் கிறது. வருட பயிரான வாழைக்கு தற் சமயம் கொரோனா ஊரடங்கு கார ணமாக சரியான விலை கிடைக்காத தாலும், வாழை கொள்முதல் செய்ய வியாபாரிகள் வராததாலும் பச்சை வாழையினை எரித்து சாம்பலாகும் நிலைக்கு விவசாயிகள் தள்ளப் பட்டுள்ளனர். இந்நிலையில் தொண்டாமுத் தூரை அடுத்த செல்லப்ப கவுண்டன் புதூரில் நடராஜன் என்ற விவசாயி தனது தோட்டத்தில் சுமார் நான் கரை ஏக்கரில் வாழை பயிரிட்டு இருந் தார். இந்த நிலையில், கொரோனா வைரஸ் தாக்கத்தால் வாழைக்கு உரிய விலை கிடைக்காத வேதனை யில் வாழைத்தாருடன் மரங்களுக்கு தீ வைத்து எரித்தார். இச்சம்பவம் விவசாயிகளிடையே வேதனையை ஏற்படுத்தியுள்ளது.