கெரோனா வைரஸ் அச்சம் காரணமாக கோவையில் திரையரங்குள் மற்றும் 3 மால்கள் மூடப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் பரவலை தடுக்க தமிழக அரசு சார்பில் பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது. இதன் ஒரு பகுதியாக கேரள மாநில எல்லையோரத்தில் உள்ள மாவட்டங்களில் திரையரங்குகள் மற்றும் மால்களை மூடவும் தமிழக அரசு அறிவுறுத்தி இருந்தது. இதனைத்தொடர்ந்து கோவை நகரில் உள்ள 3 மால்கள் இன்று மூடப்பட்டன. புரூக்பீல்ட் மால், புரோஜோன் மால், பன் மால் ஆகிய 3 மால்கள் இன்று முதல் வரும் 31 ம் தேதி வரை மூடப்படுகின்றது.
மேலும் கோவை மாவட்டத்தில் கேரள எல்லையோரத்தில் உள்ள கிணத்துகடவு, ஆனைமலை, பொள்ளாச்சி ஆகிய பகுதிகளில் 10 திரையரங்குகள் மூடப்பட்டன. மேலும் கோவையை அடுத்த கோவை குற்றாலம் அருவி, மேட்டுப்பாளையம் பரளிக்காடு ஆகிய சுற்றுலாத்தலங்களும் மூடப்பட்டுள்ளன. மேலும் பொது மக்கள் அதிகம் கூடும் இடங்களில் நோய் தடுப்பு நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் தீவிரப்படுத்த அறிவுறுத்தி உள்ளது.