தேசிய அளவிலான மக்கள் நீதிமன்றத்தில் சமரசத் தீர்வு!
நாமக்கல், ஜூன் 15- நாமக்கல் மாவட்டத்தில் 6 நீதி மன்றங்களில் நடைபெற்ற தேசிய அளவிலான மாபெரும் மக்கள் நீதி மன்றங்களில் 2,103 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப் பட்டன. நீதிமன்றங்களில், சிறு சிறு வழக்குகள் விரைந்து விசாரித்து முடிக்க மக்கள் நீதிமன்றங்கள் நடத் தப்பட்டு வருகின்றன. இந்த மக்கள் நீதிமன்றத்தில் வழக்குகள் சமாதா னமாகவும், விரைவாகவும் முடித் துக் கொள்ள வழிவகை செய்யப்பட் டுள்ளது. அதன்படி, நாமக்கல் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழு சார்பில், நாமக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றம், திருச் செங்கோடு, ராசிபுரம், பரமத்தி, குமாரபாளையம், சேந்தமங்கலம் ஆகிய 6 நீதிமன்றங்களில் தேசிய அளவிலான மாபெரும் மக்கள் நீதி மன்றம் (National Mega Lok Adalath) சனியன்று நடைபெற்றது. இவற்றில் மொத்தம் 2,103 வழக்கு கள் விசாரணைக்கு எடுத்துக் கொள் ளப்பட்டன. நாமக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் நடைபெற்ற, மக்கள் நீதிமன்றத் தில், மாவட்ட முதன்மை நீதிபதியும் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக் குழு தலைவருமான ஆர்.குரு மூர்த்தி அறிவுறுத்தல்படி, நீதிபதி கள் எஸ்.பிரபா சந்திரன், எஸ். விஜயகுமார், ஜி.ரூபனா உள்ளிட் டோர் வழக்குகளை விசாரித்தனர். முதல் அமர்வில், மோகனூர் - ஆண் டாபுரம் சாலையில் ஏற்பட்ட விபத் தில் இருசக்கர வாகனங்கள் மோதி யதில் கணவன் - மனைவி இருவர் படுகாயமடைந்த வழக்கு விசாரிக் கப்பட்டு, 3 ஆம் நபர் காப்பீடு தொகையாக 4.50 லட்சம் ரூபாய் தீர்வுத்தொகை அவர்களுக்கு வழங்கப்பட்டது. இதேபோல பல் வேறு அமர்வுகளில் வழக்குகள் விசாரித்து, தீர்வு தொகை வழங்கப் பட்டு, சமரசத் தீர்வு எட்டப்பட்டது. தருமபுரி தருமபுரி மாவட்டத்தில் அமைந் துள்ள நீதிமன்ற வளாகங்களில் நடைபெற்ற தேசிய மக்கள் நீதி மன்றத்தில், நீண்ட நாட்களாக நிலு வையில் உள்ள 2150 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப் பட்டு, அதில் 791 வழக்குகளுக்கு சம ரசம் பேசி தீர்க்கப்பட்டது. அந்த வகையில் அதற்கான சமரச தொகை யாக ரூ.3,04,57,593க்கு தீர்வு காணப் பட்டது. மேலும் வங்கி வாராக்கடன் தொடர்பாக 312 வழக்குகள் எடுத் துக் கொள்ளப்பட்டு, அதில் 217 வழக்குகளுக்கு சமரசம் பேசி ரூ.6,68,02,086க்கு தீர்வு காணப்பட் டது. மொத்தமாக 2462 வழக்குகள் எடுத்துக்கொள்ளப்பட்டு, அதில் 1008 வழக்குகளுக்கு சமரசம் பேசி ரூ.9.72 கோடிக்கு (9,72,59,679) தீர்வு காணப்பட்டது.