tamilnadu

திருப்பூரில் இன்று உலகப் புத்தக தினம்

திருப்பூர், ஏப். 22 -ஏப்ரல் 23ஆம் தேதி உலகப் புத்தகத் தினத்தை முன்னிட்டு செவ்வாயன்று (இன்று) திருப்பூர் அவிநாசி சாலையில்உள்ள பின்னல் புத்தகாலயத்தில் அனைத்துப் புத்தகங்களுக்கும் 20 சதவிகித தள்ளுபடி அளித்து விற்பனை செய்யப்படுகிறது.தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கமும், பின்னல் புத்தகாலயமும் இணைந்து சிறப்புப் புத்தகக் கண்காட்சியை நடத்துகின்றனர். இன்று ஒரு நாள் புத்தகாலயத்தில் வாங்கும் அனைத்து புத்தகங்களுக்கும் 20 சதவிகிதம் தள்ளுபடி அளிக்கப்படும் என்றும், காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை இந்த புத்தகக் கண்காட்சி நடைபெறும் என்றும் தமுஎகச திருப்பூர் மாவட்டத் தலைவர் பி.ஆர்.கணேசன் தெரிவித்தார்.

;