tamilnadu

img

பாப்பிரெட்டிப்பட்டி அருகே காட்டெருமைகள் பலி

தருமபுரி, ஜூலை 10- பாப்பிரெட்டிப்பட்டி அருகே இரு காட்டெருமை கள் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக வனத்துறையினர் விசாரித்து வருகின்றனர். தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், மெணசி பகுதியிலுள்ள வனப்பகுதியில் அதிக அளவில் காட்டெருமைகள் உள்ளன. தற்போது நிலவும் வறட்சியின் காரணமாக வனப்பகுதியில் போதிய அளவில் தீவனம் இல்லாத நிலையில், காட்டெருமைகள் விவசாய நிலங் களை நோக்கி வருகின்றன. இந்நிலையில், மெணசி ஜீவா நகரைச் சேர்ந்த விவசாயி பழனியப்பன் என்பவரது விவ சாய நிலத்தில் இருந்த சோலைப்பயிர்களில் காட் டெருமைகள் மேய்ந்துள்ளன. இதையடுத்து, வாடிய நிலை யில் இருந்த சோலைப் பயிர்களை உண்டதால், ஜீர ணிக்க முடியாமல் காட்டெருமைகள் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இதில், 5 வயதுடைய ஆண் காட்டெருமை, 3 வயதுடைய பெண் காட்டெருமை உயிரிழந்தன. இதன்பின் அரசு கால்நடை மருத்துவர் பிரகாஷ் தலைமையில் மருத்துவ குழுவினர் காட்டெருமைகளை மருத்துவ பரிசோதனைகள் செய்தனர். இதனையடுத்து மொரப்பூர் வனச்சரகர் தீ.கிருஷ்ணன் தலைமையில் வனத்துறையினர் உயிரிழந்த காட்டெருமைகளை வனப்பகுதியில் புதைத்தனர்.