tamilnadu

img

கோவை அருகே மின்சாரம் தாக்கி காட்டு யானை பலி

கோவை, செப்.28- கோவை சாடிவயல் அருகே மின்சாரம் தாக்கி 5  வயது ஆண் காட்டு யானை பரிதா பமாக உயிரிழந்தது, கோவை மாவட்டத்தில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலை வனப்பகுதியில் ஏராள மான காட்டு யானைகள் வசித்து வருகின்றன. இங்கு வசிக்கும் யானைகள் உணவு, தண்ணீர் தேடி வனத்தை விட்டு வெளியே வந்து விவசாய நிலங்களில் நுழைந்து சேதப்படுத்தும் சம்பவங்கள் சமீபமாக அதி கரித்து வருகின்றது. இதனால் யானைகள் விவசாய நிலங்களுக்கு நுழைவதை தடுக்க விவசாயிகள் உரிய அனுமதியின்றி தங்க ளது விளை நிலங்களை சுற்றி மின் வேலி களை அமைத்து வருகின்றனர். இந்தநிலையில் சாடிவயல் கல்குத்தி பகுதியில் தங்கவேல் என்பவருக்கு சொந்த மான தோட்டம் உள்ளது. அவர் தனது தோட்டத்தில் வாழை மரங்களை பயிரிட்டு இருந்தார். மேலும் தோட்டத்துக்குள் யானைகள் நுழையாமல் இருக்க மின் வேலியும் அமைத்து இருந்தார். வெள்ளி யன்று இரவு இவரது தோட்டத்துக்குள் மின்வேலியை தாண்டி 5 வயது ஆண் யானை நுழைய முயன்றுள்ளது. அப் போது வேலியிலிருந்து பாய்ந்த மின்சாரம் தாக்கி யானை சம்பவ இடத்திலேயே பரிதா பமாக இறந்தது. இதனையடுத்து, சனியன்று காலை இதனை பார்த்த அப்பகுதி மக்கள் இது குறித்து மதுக்கரை வன அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக வனத் துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று யானையில் உடலை ஆய்வு செய்த னர். மேலும், இச்சம்பவம் தொடர்பாக வனத்துறையினர் விசாரித்து வரு கின்றனர்.