tamilnadu

img

ஈரோடு மாவட்டத்தில் பரவலாக மழை - நிரம்பும் அணைகள்

ஈரோடு, நவ.21- ஈரோடு மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருவதால் அணைகள் மற்றும் நீர் நிலைகள் நிரம்பி வரு கின்றன. ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. குறிப்பாக காலை மற்றும் மதிய நேரங்களில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் பெரும் சிரமத்திற்குள்ளாகி வந்தனர். இந்நிலையில் ஈரோட்டில் பல்வேறு இடங்களில் புதனன்று இரவு முதல் பலத்த மழை பெய்தது. குறிப்பாக அணைப்பகுதிகளான அண்ணா வரட் டுப்பள்ளம், கொடிவேரி, குண்டேரிப் பள்ளம் அணை பகுதிகளில் மழை அதிகமாக பெய்துள்ளது. இதில் அதிகபட்சமாக கொடிவேரியில் 44.2 மி.மீட்டர் மழை பதிவாகியது. வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து பலத்த மழை பெய்ததால் மாவட் டத்தில் பெரும்பாலான நீர் நிலைகள் ஏரி, குளங்கள் நிரம்பி வருகிறது. மேலும், சத்தியமங்கலம், பெருந் துறை, மொடக்குறிச்சி, அம்மா பேட்டை போன்ற பகுதிகளில் பலத்த மழை பெய்தது. கொடிவேரி அணை யில் ஏற்கனவே பவானிசாகர் அணை யில் இருந்து உபரி நீர் திறந்து விடப் பட்டதால் வெள்ளப்பெருக்கு ஏற் பட்டு சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்த  நிலையில் புதனன்று இரவு கொடி வேரியில் பலத்த மழை பெய்ததால் அணைக்கு நீர்வரத்து மேலும் அதிகரித்துள்ளது. ஈரோடு மாவட்டத்தில் புதனன்று இரவு பெய்த மழை விவரம் வரு மாறு, கொடிவேரி - 44.2மி.மீ,  குண்டேரிபள்ளம் - 26.2 மி.மீ,  வரட்டு பள்ளம் - 20.2 மி.மீ, ஈரோடு  5 மி.மீ,  கவுந்தப்பாடி - 4.2 மி.மீ., பவானிசாகர் அணைக்கு தொடர்ந்து மிதமான அளவு நீர் வந்து கொண்டிருக்கிறது. நீர்ப்பிடிப்பு பகுதியான நீலகிரி மலைப்பகுதியில் மழைப்பொழிவு குறைந்ததால் நீர்வரத்து குறைந் துள்ளது என்றாலும், பவானிசாகர் அணை தனது முழு கொள்ளளவான 105 அடியிலேயே தொடர்ந்து இருந்து வருகிறது. இந்நிலையில் வியாழனன்று காலை 8 மணி நேர நிலவரப்படி பவானிசாகர் அணை 105 அடியில் உள்ளது. அணைக்கு 3,797 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து பவானி ஆற் றுக்கு 1,600 கன அடியும், கீழ்பவானி வாய்க்காலுக்கு 2,200 கனஅடியும் தண்ணீர் திறந்து விடப்பட்டு வரு கிறது.