tamilnadu

img

100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தில் காய்கறி தோட்டம் கிராம செயற்பாட்டாளர் நஞ்சம்மாள் வலியுறுத்தல்

கோவை, ஜூன் 8 -  அரசாங்கம் மக்களுக் குத் தேவையான விதை, நாற்றுகளை இலவசமாக வழங்கினால் காய்கறி தன் னிறைவு பெற்ற தமிழ கத்தை உருவாக்க முடியும் என கிராம செயற்பாட் டாளர் நஞ்சம்மாள் பாட்டி கோவையில் செய்தியாளர் களிடம் தெரிவித்தார். இலவச தற்சார்பு காய் கறி கிராம செயற்பாட்டா ளர் நஞ்சம்மாள் பாட்டி கோவை பத்திரிகையாளர் மன்றத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், வீட்டுக் காய்கறி தோட்டங்கள் அமைப்பதில் இன் னும் நாம் வெற்றி பெறவில்லை.  வீட்டுக் காய்கறி தோட்டங்கள் நாடு முழுவதும் வெற்றி பெற அரசாங்கம் தேவையான விதை மற்றும் நாற்றுகளை இலவசமாக  வழங்கிட வேண்டும்.

50 குடும்பங்கள் உள்ள ஊருக்கு ஒரு யூனிட் இயற்கை எருவை வழங்கிட வேண்டும். 100 நாள் வேலை வாய்ப்பு திட்ட தொழிலாளர்களை பயன் படுத்தி காய்கறி தோட்டம் அமைத்து தர நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என் பதை வலியுறுத்தி அனைத்து மாநில முதல்வர்கள் மற்றும் பிரதமருக்கு மின்னஞ்சல் அனுப்ப உள்ளேன். நான் ஒரு விவசாய குடும்பத்தை சார்ந்தவர். பத்து வருட ஆய்வுகளுக்கு பின் தற்சார்பு காய்கறி தோட்ட திட்டத்தை அமல்படுத்தி னேன். தற்போது 30 கிராமங்களில் இது செயல்பாட்டில் உள்ளது என்றார்.  மேலும் அவர் பேசுகையில், அதிக காய் கறிகள் பயிரிட்டாலும் வெற்றி கிடைப்ப தில்லை. இதற்கு இடபற்றாகுறையும் ஒரு காரணம் தான். நான் நாற்றை தற் போது வரை அனைவருக்கும் இலவச மாக வழங்கி வருகிறேன். மேலும்,  வேளாண் பல்கலை பரிந்துரை செய்யும் பயிர்கள் மட்டுமே இந்த தற்சார்பு காய்கறி திட் டத்தில் பயன்படுத்தி வருகிறேன் என தெரி வித்தார்.  

இதனைத்தொடர்ந்து நஞ்சம்மாள் மகன்  எழுத்தாளர் பாரதி சின்னசாமி மற்றும் சுற்று சூழல் ஆர்வலர் அங்கயற்கண்ணி ஆகி யோர் கூறுகையில், நாட்டில் ஒரு கோடியே 14 லட்சம் சுய உதவிக்குழுக்கள் இருக்கின் றன.  இந்த குழுக்கள் முருங்கை, எலுமிச்சை போன்றவற்றை வளர்க்க அதிக இடம் தேவைப்படாது. வீட்டில் ஒரு பகுதி சாலை யோரம் என இதனை பயிரிடலாம். 100 முதல் 200 ரூபாய் மதிப்பிலான காய்கறிகள் உற் பத்தி செய்தால் மாதம் ரூ.5 ஆயிரம் வரை சேமிக்க முடியும். இளைஞர்கள் பள்ளி மாணவர்கள் காய்கறி தற்சார்பு திட்டத்தை செயல்படுத்தும் பட்சத்தில் பெரும்பாலான மக்கள் பயனடைவார்கள். நாடு முழுவதும் 12 கோடி குடும்பங்கள் இந்த திட்டத்தை செயல்படுத்தினால் ரூ.72 ஆயி ரம் கோடி வரை பெற முடியும். மேலும், 100  நாள் வேலைவாய்ப்பு திட்டத்தில்  4 கோடி பேர் பணியாற்றி வருவதாகவும் வீட்டு தோட்டங்கள் அமைக்கபட்டால் தன் னிறைவு பெற்ற கிராமங்களை உருவாக்க முடியும் என்றும் தெரிவித்தார்.