முதல்வரின் வெளிநாட்டு பயணத்தால் வந்த முதலீடு எவ்வளவு? -இ.ஆர்.ஈஸ்வரன் கேள்வி
உடுமலை, செப். 9- முதல்வர் நாடு திரும்பியவுடன் வெளிநாட்டு முத லீடு எவ்வளவு வந்தது என தமிழக அரசு வெள்ளை யறிக்கை வெளியிட வேண்டும் என கொமதேக பொது செயலாளர் இ.ஆர்.ஈஸ்வரன் வலியுறுத்துள்ளார். கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் ஊராட்சி செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் உடுமலையில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட அக்கட்சியின் பொதுச்செயலாளர் இ.ஆர்.ஈஸ்வரன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறுகையில், அரசியல் கட்சிகளும்,பொதுமக்களும் பல குளங் களை தூர் வாரிய பின்பு தான் அரசு தூர்வார தொடங்கி யது. பிஏபி கால்வாய் மற்றும் குளங்கள் சரிவர தூர்வா ரப்படவில்லை. ஆனைமலை -நல்லாறு திட்டம் தான் பிஏபி பாசன திட்டத்தில் நிலவும் தண்ணீர் பிரச்ச னைக்கு நிரந்தர தீர்வாகும். எனவே, இத்திட்டத்தை நிறைவேற்ற அனைவரும் வலியுறுத்த வேண்டும். உடுமலை பகுதியில் பட்டு விவசாயிகள் உற்பத்தி செய்யும் பட்டுக்கூடுகளை விற்பனை செய்ய விற் பனை மையத்தை அமைக்க தாமதப்படுத்தாமல் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தேவனூர்புதூரில் மேம்பாலம் கட்டும் பணியில், ஒரு சிலரின் இடங்களை காப்பாற்றுவதற்காக பொதுமக் கள் பாதிக்கும் வகையில் பாதையை மாற்றி அமைத் துள்ளனர். இதில் அரசு தலையிட்டு முறையான அள வீடு செய்து அக்கிரமிப்புகளை பாரபட்சம் இன்றி அகற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என் றார். மேலும், முதல்வர் வெளிநாடு சுற்றுப் பயணம் முடித்து வந்தவுடன் எந்தெந்த நாடுகளிலிருந்து தமிழ கத்திற்கு என்ன முதலீடுகள் வருகின்றன என்பது குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். ஏனென்றால் தமிழக அரசின் சார்பில் இரண்டு முதலீட் டாளர்கள் மாநாட்டை நடத்தினார்கள். முதல் மாநாட் டில் ரூ.2 லட்சத்து 40 ஆயிரம் கோடி முதலீடு என்றார் கள். அடுத்து இரண்டாவது மாநாட்டில் ரூ. 3 லட்சம் கோடி வந்திருப்பதாகக் கூறினார்கள். அதன்படி ரூ.5 லட்சத்து 40ஆயிரம் கோடி முதலீடு தமிழகத்திற்கு வந்திருக்க வேண்டும். அப்படி முதலீடுகள் வந்தி ருந்திருந்தால் யாருக்குமே வேலை இல்லாமல் போகாது. ஆனால் படித்தவர்களுக்கு கூட வேலை வாய்ப்பு இல்லை என்றால், தொழிற்சாலைகள் வரவில்லை என்றுதானே அர்த்தம். மக்கள் மத்தியில் தொழில் முதலீடுகள் வருவது குறித்து சந்தேகம் வருகிறது. எனவே தமிழக முதல்வர் வந்தவுடன் பத்திரிகையாளர்கள் முன்னிலையில் என்னென்ன முதலீடுகள் வருகிறது என்பது குறித்து வெள்ளை அறிக்கை அளிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறி னார்.
உடுமலை அரசு கலைக்கல்லூரி மாணவர்களுக்கு 4 தங்க பதக்கங்கள்
உடுமலை, செப். 9- பாரதியார் பல்கலைக்கழகத்தின் (ஏப்ரல் 2019) நடைபெற்ற இறுதித்தேர்வுகளில் உடுமலைப் பேட்டை அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் நான்கு தங்கப்பதக்கங்கள் உட்பட 11 சிறப்பிடங்களைப் பெற்றுள்ளனர். இளநிலைப் பட்ட வகுப்புகளில் புள்ளியியல் பாடப்பிரிவில் கே.சனாஃபரீன் முதலிடம் பெற்றுத் தங்கப்பதக்கம் வென்றுள்ளார். வணிகவியல்-மின்வணிகம் (B.Com(ecom) ) பாடப்பிரிவில் பி.சரஸ்வதி எட்டாம் இடத்தையும், வேதியியல் பாடத்தில் ஆர்.ஜெகதீஸ்குமார் 9ஆம் இடத்தையும், தாவரவியல் பாடத்தில் எஸ்.ராஜன் 6ஆம் இடத்தையும், சி.கற்பகவல்லி 10ஆம் இடத்தையும் பெற்றுள்ளனர். முதுநிலைப் பாடப்பிரிவுகளில் சுற்றுலாவியல் பாடத்தில் எஸ்.சங்கர்குமார் வேதியியல் துறையில் வி.வீரகுமார், புள்ளியியல் பாடப்பிரிவில் கே.தீபிகா ஆகியோர் முதலிடம் பெற்று தங்கப்பதக்கம் வென் றுள்ளனர். வேதியியல் துறையில் ஆர்.ரேணுகாதேவி மூன்றாமிடத்தையும், எஸ்.ஆதிரா நான்காம் இடத் தையும், இயற்பியல் பாடத்தில் எஸ்.பிரியங்கா 4ஆம் இடத்தினைப் பெற்றுள்ளனர். இம்மாணவ, மாணவியரைக் கல்லூரி முதல்வர் (பொ) பேரா.ச.பொன்முடி மற்றும் துறை தலைவர்க ளும், போராசிரியர்களும் மற்றும் முன்னாள் மாணவர் சங்க அறக்கட்டளை நிர்வாகிகள் வாழ்த்திப் பாராட்டி னர்.
உடுமலையில் அம்பேத்கர் கல்வி வேலைவாய்ப்பு மையம் துவக்கம்
உடுமலை, செப்.9- உடுமலையில் அம்பேத்கர் கல்வி மற்றும் வேலை வாய்ப்பு இலவச பயிற்சி மையம் ஞாயிறன்று தொடங்கப்பட்டது. அம்பேத்கர் கல்வி மற்றும் வேலை வாய்ப்பு பயிற்சி மையமும் ரோட்டரி சங்கமும் இணைந்து நடத்தும் மத்திய மாநில அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள் நடத்தும் வேலை வாய்ப்பு போட்டித் தேர்வுகளில் கலந்து கொள்ளும் மாணவ மாணவிக ளுக்கான இலவச பயிற்சி மையத் தொடக்க விழா உடுமலைப்பேட்டை ஆண்டாள் சீனிவாசன் லே அவுட்டிலுள்ள ரோட்டரி இல்லத்தில் நடைபெற் றது. இந்நிகழ்ச்சிக்கு ரோட்டரி சங்கத்தின் தலை வர் ஏ.ஜெயராஜ் தலைமை வகித்தார். தொழில் சார் சேவைகளின் இயக்குநர் கெ.ரவிக்குமார், அம் பேத்கர் பயிற்சி மைய இணை ஒருங்கிணைப் பாளர்கள் எஸ்.செல்லத்துரை, எஸ்.கே.தனுஷ்கோடி ஆகியோர் முன்னிலை வகித்தனர். பயிற்சி மைய ஒருங்கிணைப்பாளர் மு.பாலச்சந்திரமூர்த்தி வர வேற்றார். ரோட்டரி சங்க மாநிலத் தலைவர் ராம்ஜி ராகவன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு பயிற்சியைத் தொடங்கி வைத்து உரையாற்றினார். அம்பேத்கர் பயிற்சி மையங்களின் மாநில ஒருங்கி ணைப்பாளர் கே.கணேஷ், அரசு கலைக்கல்லூரி தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் வ.கிருஷ்ணன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். இறுதியில் ரோட்டரி சங்கத்தின் செயலாளர் ரகுநந்தன் ராஜு நன்றி கூறினார்.
ரூ.8 லட்சத்திற்கு நிலக்கடலை ஏலம்
அவிநாசி, செப். 9- சேவூர் ஒழுங்கு முறை விற்பனைக் கூடத்தில் நடை பெற்ற நிலக்கடலை ஏலத் தில் ரூ.8 லட்சத்திற்கு வர்த்த கம் நடைபெற்றது. அவிநாசி அடுத்த சேவூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற ஏலத்திற்கு 350 மூட்டை நிலக்கடலை வந்திருந்தன. குவிண்டால் ஒன்றுக்கு முதல் ரக நிலக் கடலை ரூ.6,600 முதல் ரூ.6,730 வரையிலும், இரண்டாவது ரக நிலக் கடலை ரூ.6,100 முதல் ரூ.6,300 வரையிலும், மூன்றாவது ரக நிலக் கடலை ரூ.5,900 முதல் ரூ.6,000 வரையிலும் ஏலம் போனது. மொத்தம் ரூ.8 லட்சத்திற்கு ஏலம் நடைபெற்றது. இதில் 11 வியாபாரிகள், 19 விவசாயிகள் பங்கேற்றனர்