tamilnadu

பொள்ளாச்சி சிறை கைதிகள் இடமாற்றம்

பொள்ளாச்சி, ஜூலை 3-  பொள்ளாச்சி கிளைச் சிறையில் அடைக்கப்பட்டி ருந்த பல்வேறு குற்ற வழக் குகளில் தொடர்புடைய 30க் கும் மேற்பட்டோர் கோவை மத்திய சிறைக்கு இடமாற் றம் செய்யப்பட்டனர். கோவை மாவட்டம், பொள்ளாச்சி கிளைச் சிறை யில் பல்வேறு குற்ற வழக்கு களில் ஈடுபட்டு சிறையி லடைக்கப்பட்ட 30க்கும் மேற்பட்ட விசாரணை கைதிகள்,  இடம் பற்றாக் குறையினால் வெள்ளி யன்று கோவை மத்திய சிறைக்கு மாற்றப்பட்டனர்.  முன்னதாக,  பொள்ளாச்சி கிளைச் சிறையினுள் 100க் கும் குறைவான கைதிகளை மட்டுமே வைக்க முடியும் என்கிற நிலையில், தற் போது 90க்கும்  மேற்பட்ட கைதிகள் உள்ளனர். இத னால் அங்கு போதிய இடம் வசதியில்லாததால் கோவை மத்திய சிறைக்கு கொண்டு செல்லப்படுவ தாக சிறை காவலர்கள் தெரி வித்தனர்.

;