tamilnadu

திருப்பூர்,தாராபுரம் முக்கிய செய்திகள்

தாய்லாந்தில் கொத்தடிமைகளாக சிக்கிய மகன்களை மீட்ட தாய் டிராவல் ஏஜெண்ட் மீது நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை

திருப்பூர், ஜூலை 16 – தாய்லாந்து நாட்டில் கொத்தடிமை களாகச் சிக்கிய இரு மகன்களை மீட்ட தாய் தங்களை ஏமாற்றிய டிராவல் ஏஜெண்ட் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி  மாவட்ட ஆட்சியரகத்தில் தர்ணா போராட் டம் நடத்தினார். திருப்பூர் குளத்துப்புதூரைச் சேர்ந்தவர் மாரியம்மாள். மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த இவர் பனியன் நிறுவனத்தில் பணி யாற்றி தனது மூன்று மகன்களையும் வளர்த்து வருகிறார். இவரது மூத்த மகன்  மணித்துரை, இரண்டாவது மகன் மணி கண்டன் ஆகியோர் பனியன் நிறுவனங் களிலேயே வேலை செய்து வந்தனர். இந்நிலையில் தாய்லாந்தில் உள்ள பனியன் நிறுவனங்களில் வேலை வாங்கித்  தருவதாகவும், மாதம் ரூ.40 ஆயிரம் சம்பளம்  கிடைக்கும் என டிராவல் ஏஜெண்ட் ரஞ்சித் என்பவர் ஆசை வார்த்தை கூறி யுள்ளார். இதையடுத்து மாரியம்மாள் தனது  இரு மகன்களையும் அனுப்புவதற்கு ரூ.2  லட்சத்து 70 ஆயிரம் பணத்தை ரஞ்சித்திடம்  கொடுத்துள்ளார். கடந்த ஜனவரி மாதம்  இருவருக்கும் தாய்லாந்து செல்வதற்கான டிக்கெட், விசா எடுத்து அனுப்பி வைத் துள்ளார். ஆனால் அங்கு இருவருக்கும் வெவ்வேறு இடங்களில் ஓட்டலில் வேலை  செய்ய வேண்டிய நிலை இருந்தது.  மேலும் அவர்களை சுற்றுலா விசாவில்  அழைத்துச் சென்றது தெரிய வந்தது. தாங்கள் ஏமாற்றப்பட்டது தெரிந்த வுடன் தாய் மாரியம்மாளுக்கு அவர்கள்   தகவல் கொடுத்தனர். இதுகுறித்து மாரியம்மாள் ரஞ்சித் மீது திருப்பூர் மத்திய காவல் நிலையத்தில் புகார் அளித்தார். ரூ.58ஆயிரம் செல வழித்து மார்ச் மாதம் இளைய மகன் மணி கண்டனை மீட்டார். மணித்துரையை மீட் பதற்கு பணம் இல்லாத நிலையில் ஆட்சி யரிடம் கோரிக்கை மனு அளித்தார். நாளிதழ் செய்தி அடிப்படையில் தாய் லாந்தில் சிக்கியுள்ள மணித்துரையை மீட்க இந்திய தூதரகம் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என்று வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் டுவீட் செய் தார். ஆனால் அதுபோல் மத்திய அரசு  எந்த உதவியும் செய்யவில்லை.  இதனால் மாரியம்மாள் சிரமப்பட்டு  பணம் சேர்த்து மணித்துரையையும்  தாய்லாந்தில் இருந்து மீட்டு வரவழைத் தார். இந்நிலையில் தங்களை ஏமாற்றிய ஏஜெண்ட் ரஞ்சித் மீது காவல் துறையினர் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும், தான் செலவழித்த பணத்தை மீட்டு தரக்  கோரியும் மாவட்ட ஆட்சியர் அலுவல கத்தில் திங்களன்று, தனது இரு மகன் களுடன் மாரியம்மாள் தர்ணா போராட் டத்தில் ஈடுபட்டார். இதையடுத்து உடனடி யாக நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதி  கூறினர். இதையடுத்து தர்ணா  போராட்டத்தை மாரியம்மாள் கை விட்டார்.

வீரபாண்டி அடுக்குமாடி குடியிருப்பு வீடுகள் பெற பங்களிப்புத் தொகை விலக்களிக்க கோரிக்கை

திருப்பூர், ஜூலை 16 – வீரபாண்டி அடுக்குமாடி குடியிருப்பு வீடுகள் பெற பங்களிப்புத் தொகை விலக்களிக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.  திருப்பூர் மாநகராட்சியில் 49 வது வார்டு  ஆலங்காடு பகுதியில் நீண்ட காலமாக குடி யிருந்து வரும் மக்களை ஸ்மார்ட் சிட்டி  திட்டத்துக்காக, அங்கிருந்து அப்புறப் படுத்த மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டிருப்பதாக தெரிகிறது. இவர் கள் அனைவருக்கும் வீடு திட்டத்தின் கீழ் வீரபாண்டி பகுதியில் உள்ள அடுக்கு மாடி குடியிருப்பில் வீடுகள் ஒதுக்கப்பட்ட நிலையில், ஒவ்வொரு வீட்டிற்கும் பங்களிப்புத் தொகையாக ரூ.1 லட்சத்து 10 ஆயிரம் கேட்கப்படுவதாகவும், நீண்ட காலமாக ஆலங்காடு பகுதியில் வீடு கட்டி குடியிருந்த இடத்தையும், வீட்டையும் இழப்பதோடு தாழ்த்தப்பட்ட ஏழை சமூக  மக்கள் என்பதால் அவர்களால் பங்களிப்புத்  தொகை செலுத்த இயலாது. எனவே கோவை மாநகரில் ஏழை எளிய மக்கள் அனைவருக்கும் திட்டத்தின் கீழ் வழங்கப் படும் வீடுகளுக்கு பங்களிப்புத் தொகை யிலிருந்து விலக்கு அளித்தது போல இங்கும் விலக்கு அளிக்க வேண்டும் என கோரி இப் பகுதி பெண்களுடன் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் எம்.ரவி திருப்பூர் மாவட்ட ஆட்சியரகத்துக்கு வந்து செவ்வாயன்று மனு அளித்தார்.

மணல் கடத்தல்: டிராக்டர் பறிமுதல்

தாராபுரம், ஜூலை 16 - தாராபுரம் அருகே மணல் கடத்தலுக்கு பயன்படுத்தப் டிராக்டரை காவல்துறையினர் செவ்வாயன்று பறிமுதல் செய்தனர். தாராபுரம் அடுத்துள்ள அலங்கியம் காவல்நிலைய ஆய்வாளர் நாகராஜன் தலைமையில் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கூடுதுறை அமராவதி ஆற்றுப்படுகையில் ஒரு டிராக்டரில் மணல்  அள்ளிக்கொண்டிருந்தனர். விசாரணையில் மணக்கடவு, வெள்ளிக்காட்டு தோட்டத்தை சேர்ந்த பாலசுப்பிரமணியன் (45) மணல் கடத்தலில் ஈடுபட்டது தெரியவந்தது. இதை யடுத்து கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட டிராக்டர் பறி முதல் செய்யப்பட்டு அலங்கியம் காவல்நிலையத்தில் நிறுத்தப்பட்டது. இதுகுறித்து வழக்குப் பதிவு செய்யப் பட்டு விசாரணை நடைபெற்ற வருகிறது. மேலும் தாரா புரம் பகுதியில் அதிகாரிகள் ரோந்து பணிகளில் ஈடுபட்ட போதும் தலைமை நீரேற்ற நிலையம் அருகே உள்ள வழித்தடத்தில் மணல் திருடுவது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மேலும் அலங்கியம் ஏரணமேடு பகுதிகளில் மணல்கடத்தல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.