tamilnadu

திருப்பூர், அவிநாசி முக்கிய செய்திகள்

வெள்ள அபாய எச்சரிக்கை

உடுமலை, செப். 16- திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை வட் டம், அமராவதி அணையின் நீர் மட்டம் திங்களன்று காலை 8 மணியளவில் 85.01 அடியாக உயர்ந்துள் ளது. அணைக்கு நீர்வரத்து அதிகரிக்கும் பட்சத்தில் அமராவதி உபரி நீர் திறந்துவிடப்படும். எனவே அம ராவதி ஆற்று கரையோரப் பகுதிகளில் உள்ள பொது மக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு உதவி செயற் பொறியாளர் சு.சரவணன் விடுத்த அறிக்கையில் தெரி வித்துள்ளார்.

அவிநாசி பகுதியில் மிதமான மழை

அவிநாசி, செப்.16- அவிநாசி சுற்று வட்டார கிராம பகுதிகளில் திங்க ளன்று பெய்த  மழையால் பொதுமக்கள், விவசாயி கள் மகிழ்ச்சியடைந்தனர். அவிநாசி சுற்றுவட்டார பகுதிகளான கருவலூர், கானூர் , நம்பியாபாளையம், ராமநாதபுரம், உப்பிலி பாளையம், வேட்டுவபாளையம் மற்றும் ஆட்டை யாம்பாளையம், வேலாயுதம்பாளையம், செம்பிய நல்லூர் உள்பட பல கிராம பகுதிகளில்  திங்களன்று நண்பகலில் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக சாரல் மழையும், விட்டு விட்டு கன மழையும் பெய் தது. இதனால் விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி யடைந்தனர்.

கல்வி உதவித்தொகை பெற மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு அழைப்பு

திருப்பூர், செப். 16- திருப்பூர் மாவட்டத்தில் கல்வி பயிலும் மாற்றுத் திறனாளி மாணவ, மாணவியர்கள் கல்வி உதவித் தொகை பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படு கிறது.  இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.பழனி சாமி விடுத்துள்ள அறிக்கையில், திருப்பூர் மாவட் டத்தில் 2019-20-ம்-நிதியாண்டில் 1ஆம் வகுப்பு முதல் 5ஆம் வகுப்பு வரை ரூ.1,000, 6 லிருந்து 8ஆம் வகுப்பு வரை ரூ.3ஆயிரம், 9-12 வகுப்புகளுக்கு வரை ரூ.4ஆயிரம், பட்டப்படிப்பு-ரூ.6ஆயிரம், பட்ட மேற்படிப்பு பயிலும் மாற்றுத்திறனாளி மாணவ, மாணவியர்களுக்கு ரூ.7ஆயிரம் கல்வி உதவித் தொகை வழங்கப்படவுள்ளது. இத்திட்டத்தின் கீழ் கல்வி உதவித்தொகைக்கான விண்ணப்பங்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலுள்ள மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் வழங் கப்படுகிறது. தேசிய அடையாள அட்டை, வங்கி கணக்கு புத்தக நகல் மற்றும் தற்போது கல்வி பயிலும் சான்றிதழ் ஆகியவற்றுடன் செப்.31க்குள் விண்ணப்பித்து பயன் பெறுமாறு  கூறியுள்ளார்.

மீண்டும் கைவிடப்பட்டது நீர்வழித்தட ஆக்கிரமிப்பு அளவிடும் பணி

அவிநாசி, செப். 16- அவிநாசி அருகே மடத்துப்பாளையம் மாகாளி யம்மன் கோவிலை ஒட்டியுள்ள நீர்வழித்தட ஆக்கி ரமிப்பை அளவிடும் பணி திங்களன்று மீண்டும் கைவிடப்பட்டது. அவிநாசி அருகே மடத்துப்பாளையம் பகுதியில், நீர்வழித்தடம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாக விவசாயி  சுப்ரமணியம் என்பவர், உயர்நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். இவ்வழக்கில் அப்பகுதியை நில அளவை செய்து அறிக்கை தாக்கல் செய்ய பொதுப்பணி துறையினருக்கு நீதிமன்றம் உத்தர விட்டது. ஆகஸ்ட் 9 ஆம் தேதி பொதுப்பணித்துறை மேற்கண்ட பகுதியில் நில அளவை செய்ய முற்பட் டனர். இதற்கு அப்பகுதியினர் சிலர்ஆட்சேப ணை தெரிவித்ததால் அளவீடும் பணி நடை பெறவில்லை.  இந்நிலையில் திங்களன்று மீண்டும் பொதுப்பணி துறை, நில அளவு செய்யும் அதிகாரிகள், ஆகியோர் நில அளவீடு செய்யச் சென்றனர். அப்போது  அனைத்து தரப்பு இடங்களையும் நில அளவீடு செய்ய வேண்டும் என பொதுமக்கள் கூறியதைத் தொடர்ந்து நில அளவீடு செய்யும் பணி மீண்டும் கைவிடப்பட்டது.

அலகுமலை வேலி குறித்து  மாவட்ட ஆட்சியர் அறிக்கை தர  மனித உரிமை ஆணையம் உத்தரவு 

திருப்பூர், செப். 16 - திருப்பூர் மாவட்டம் அலகுமலையில் தலித் மக்கள் பயன்படுத்தி வந்த பாதை யில் அமைக்கப்பட்டிருக்கும் கம்பி வேலி குறித்து அறிக்கை சமர்ப்பிக்கும்படி திருப்பூர் மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.பழ னிச்சாமிக்கு தேசிய மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் தேசிய மனித உரிமை ஆணை யத்தின் பொது விசாரணை கடந்த வியா ழக்கிழமை நடைபெற்றது. இதில் பொங்க லூர் ஒன்றியம் அலகுமலையில் தலித் மக்கள் பயன்படுத்தி வந்த பாதையை மறைத்து கம்பி வேலி அமைக்கப்பட்டு இருப்பது பற்றி தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் அளிக்கப்பட்ட புகார் மீது விசாரணை நடத்தப்பட்டது. இந்த விசாரணைக்கு திருப்பூர் மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.பழனிச்சாமி, திருப்பூர் மாவட்ட கூடுதல் காவல் கண் காணிப்பாளர் குணசேகரன் ஆகியோர் ஆஜரானார்கள். தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் மாவட்டச் செயலாளர் ச.நந்தகோபால் கலந்து கொண்டார். இந்த விசாரணையில் பொங்கலூர் ஒன்றியம் அலகுமலை கிராமத்தில் தலித் மக்களைத் தடுக்கும் வகையில் வருவாய்த் துறைக்குச் சொந்தமான இடத்தில் கம்பிவேலி அமைக்கப்பட்டு இருந்தால் அதை உடனடியாக அகற்ற வேண்டும் என்று மனித உரிமை ஆணைய நீதிபதி உத்தரவிட்டார். இது தொடர்பாக கூடுதல் காவல் கண்காணிப்பாளர் நீதிபதியிடம் சென்று விளக்கம் அளித்தார். இதையடுத்து மேற்படி வேலி அமைக்கப்பட்டுள்ள இடத்தின் வகைப்பாடு குறித்து உடனடி யாக மாவட்ட ஆட்சியர், ஆணையத்திற்கு எழுத்துப்பூர்வமாக அறிக்கை அனுப்ப வேண்டும் என்று ஆணையிட்டார்.