tamilnadu

img

அரசு மருத்துவமனையில்

கோவை, மே 7-பொள்ளாச்சி அரசு மருத்துவமனை வளாகத்தில் பச்சிளம் குழந்தையைக் கடத்திய பெண் கைது செய்யப்பட்டுள்ளார். பொள்ளாச்சியை அடுத்த நரிக்கல்பதியை சேர்ந்தவர் பாலன் (40). இவரது மனைவி பிரசவத்திற்காக கடந்த மாதம் 29ம் தேதி பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு ஆண் குழந்தையை பெற்றார். மருத்துவமனையிலிருந்து கடந்த ஞாயிறன்று வீட்டிற்குப்புறப்பட்ட போது, மருந்து வாங்க குழந்தையின் பெற்றோர் சென்றனர்.அப்போது மருத்துவமனையில் தங்கியிருந்த போது பழகிய பெண் ஒருவரிடம் குழந்தையை கொடுத்துவிட்டு சென்றனர். திரும்பி வந்த பார்த்தபோது குழந்தையுடன் அப்பெண் மாயமானது தெரியவந்தது. இதையடுத்து காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. மருத்துவமனையிலிருந்த கண்காணிப்புகேமரா பதிவுகளைக் கொண்டு காவல் துறையினர் விசாரித்த போது பச்சிளம் குழந்தையை கடத்திய பெண் உடுமலையை அடுத்த குறிச்சிகோட்டையைச் சேர்ந்த மாரியம்மாள் எனத் தெரியவந்தது. அங்குசென்ற காவல் துறையினர் அவரைகைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். பின்னர் கோவை மத்தியசிறையில் அடைக்கப்பட்டார். மாரியம்மாள்தனக்கு பிறந்த குழந்தை இறந்து விட்டதால் குழந்தையைக் கடத்தியதாக விசாரணையில் ஒத்துக் கொண்டதாக காவல் துறையினர் தெரிவித்தனர்.

;