tamilnadu

img

பொழிச்சலூர் குடியிருப்பு பகுதியில் விமான நிலைய விரிவாக்கத்தை எதிர்த்து நடைபெற்ற போராட்டம்

பொழிச்சலூர் குடியிருப்பு பகுதியில் விமான நிலைய விரிவாக்கத்தை எதிர்த்து நடைபெற்ற போராட்டத்தில் முன்னின்ற கே.பரமேஸ்வரி அவரது மகள்கள் பூர்ணிமா, பிரியா ஆகியோரின் 12ஆவது நினைவு தினம் புதனன்று (ஜன.22) அனுசரிக்கப்பட்டது. பொழிச்சலூரில் உள்ள அவரது நினைவு இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த உருவப்படத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர்கள் க.பீம்ராவ், ஆர்.வேல்முருகன், மூத்த தலைவர் டி.நந்தகோபால், பல்லாவரம் பகுதிச் செயலாளர் எம்.சி.பிரபாகரன், மத்தியசென்னை மாவட்டச் செயற்குழு உறுப்பினர் எம்.தாமோதரன், தென்சென்னை மாவட்டக்குழு உறுப்பினர்கள் எஸ்.நரசிம்மன், எஸ்.ஜெயசங்கரன், ப.ஆறுமுகம், உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இந்நிகழ்வையொட்டி பரமேஸ்வரியின் கணவர் கருப்பையா பிள்ளை, தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்திற்கு 5 ஆயிரம் ரூபாய் நன்கொடை வழங்கினார்.

;