சேலம்,டிச.3- பண்பாட்டு மாற்றங்களும், பண் பாட்டுச் சிதைவுகளும் சமகால சமூகத்தின் வேர் அறுக்கும் போது தனி மனிதனின் வாழ்க்கையை நிலை நிறுத்தும் தாங்கு தூணாக துணை வருவது மனநல சிகிச்சை யாளர்களே” என்று பெரியார் பல் கலைக் கழகத்தின் துணைவேந்தர் பேரா. பொ.குழந்தைவேல் தெரிவித் தார். சேலம் பெரியார் பல்கலைக் கழகத்தின் உளவியல் துறை பன் னாட்டு அளவிலான மனநல குறுகி கால சிகிச்சை தொடர்பான இரு நாள் பயிற்சிப் பட்டறை ல் டிச.3 மற்றும் டிச.4 ஆகிய இரு தினங்கள் நடைபெறுகிறது. துறைத்தலைவர் பேராசிரியர் கதிரவன் தலைமை யில் நடைபெற்ற இந்த விழாவை துவக்கி வைத்து பல்கலையின் துணைவேந்தர் பேரா பொ. குழந்தைவேல் கூறியதாவது, மனிதன் ஓர் அற்புத உயிரி. ஆனால் அவனுக்கும் அவனது நடவடிக் கைகளாலேயே சிக்கல்கள் உருவா கின்றன. தொடக்கத்தில் தனி மனித சிக்கல்களாக உருவாகும். இவை பின் சமூகச் சிக்கல்களாக மாறி அனைவரையும் பாதிக்கின்றன. சமூகச் சிக்கல்களாக மாறியவுடன், தீர்வு காண சமூகத் தலைவர்கள் உள்ளனர். ஆனால் உளவியல் நிபுணர்களே அதை தனி மனித தோற்றுவாய் நிலையினிலேயே சரி செய்கின்றனர். ஆம். பண் பாட்டு மாற்றங்களும், பண்பாட்டுச் சிதைவுகளும் சமகால சமூகத்தின் வேர் அறுக்கும் போது தனி மனிதனின் வாழ்க்கையை நிலை நிறுத்தும் தாங்கு தூணாக துணை வருவது மனநல சிகிச்சையாளர் களே. எனவே உளவியல் கல்வி என்பதும் உள நல நிபுணர்களை உருவாக்குவது என்பதும் ஒரு முன்னெச்சரிக்கை சார் தலையாய கடமையாகும் என்றார். இந்த பயிற்சி பட்டறையை இத்தாலி நாட்டின் புகழ் பெற்ற உளநலநிபுணர்பெர்னார் டோபவ்லி வழங்குகிறார். நிகழ்வில் உளவியல் கல்வியியல் பேரா சிரியர்கள், மாணவர்கள், ஆய்வு மாணவர்கள், மனநல நிபுணர்கள் ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.