tamilnadu

img

உதகையில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் ரூ.75 ஆயிரம் அபராதம் வசூல்

உதகை, மே 10-நீலகிரி மாவட்டத்தின் சுற்றுச் சூழலைப் பாதுகாக்கும் வகையில் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பயன்படுத்தியவர்களிடம் ரூ.74,600 அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது.நீலகிரி மாவட்டத்தில் உதகை, குன்னூர், கூடலூர் மற்றும் நெல்லியாளம் நகராட்சிக்குட்பட்ட 11 பேரூராட்சிகள், 4 ஊராட்சி ஒன்றியங்கள் ஆகியவை நான்கு மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டள்ளன.இங்கு தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களின் உபயோகத்தை தவிர்க்கவிவசாயிகள், பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்த கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. மாவட்ட ஆட்சியர் ஜெ.இன்னசென்ட் திவ்யா உத்தரவின் பேரில் வெள்ளியன்று கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.இந்த ஆய்வில் 28.100 கிலோ பிளாஸ்டிக் பறிமுதல் செய்யப்பட்டது. அபராதத் தொகையாக ரூ.74 ஆயிரத்து 600 வசூல்செய்யப்பட்டுள்ளது. வரும் காலங்களில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தாமலும், பொது இடங்களில் குப்பை கொட்டுவதை தவிர்த்துசுற்றுச் சூழலைப் பாதுகாக்க ஒத்துழைக்குமாறு மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.