tamilnadu

img

கிருஷ்ணகிரியில் டாஸ்மாக் ஊழியர் வெட்டி படுகொலை

கோவை, ஆக.16–  கிருஷ்ணகிரியில் டாஸ்மாக் ஊழி யர் படுகொலை செய்யப்பட்ட சம்ப வத்தை கண்டித்தும், டாஸ்மாக் ஊழி யர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வலியுறுத்தியும் வெள்ளியன்று டாஸ் மாக் கடைகளை பூட்டி ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரப ரப்பு ஏற்பட்டது.  கிருஷ்ணகிரி மாவட்டத்தில்  டாஸ் மாக் ஊழியர் ராஜா என்பவரை புத னன்று சமூக விரோதிகள் படுகொலை செய்து, மதுபான விற்பனை பணம்  சுமார் ரூ.1 லட்சத்தை கொள்ளைய டித்து சென்றனர். இச்சம்பவம் தமிழகம் முழுவதும் உள்ள டாஸ்மாக் ஊழியர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தொடர்ந்து இது போன்று டாஸ்மாக் ஊழியர்களை குறிவைத்து தாக்குதல் நடத்தி பணம் பறிக்கும் நடவடிக்கை ஊழியர்களின் உயிர்மற்றும் உடமைக்கு பாதுகாப் பற்ற சூழலை உருவாகியுள்ளது.  இதனையடுத்து, டாஸ்மாக் கடை களுக்கும், பணியாளர்களுக்கும் உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும், டாஸ்மாக் கடைகளில் பாதுகாப்பு அம்சங்களை உடனே ஏற்படுத்தி தர வேண்டும். பலியான ஊழியர் குடும் பத்திற்கு உரிய நிவாரணத்தை தமி ழக அரசு வழங்க வேண்டும் என வலி யுறுத்தி வெள்ளியன்று டாஸ்மாக் கடைகளை அடைத்து போராட்டத் தில் ஈடுபட அனைத்து டாஸ்மாக் தொழிற்சங்ககூட்டு கமிட்டி அறை கூவல் விடுத்தது. இதன்தொடர்ச்சியாக கோவை மாவட்டத்தில்  200 க்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகள் பூட்டப்பட்டது. மேலும், அனைத்து தொழிற்சங்கங் களை சேர்ந்த டாஸ்மாக் தொழி லாளர்கள் கூட்டமைப்பினர் கோவை பீளமேடு பகுதியில் உள்ள முது நிலை மண்டல மேலாளர் அலுவல கத்தை முற்றுகையிட்டு போராட் டத்தில் ஈடுபட்டனர். இதில் சிஐடியு டாஸ்மாக் ஊழியர் சங்கத்தின் பொதுச்செயலாளரும், அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பின் தலை வருமான ஜான் அந்தோனிராஜ்  மற்றும் திமுக, பாமக உள்ளிட்ட  அனைத்து தொழிற்சங்கங்களைச் சேர்ந்த   500க்கும் மேற்பட்ட டாஸ் மாக் ஊழியர்கள் பங்கேற்று கோரிக்கை முழக்கங்களை எழுப் பினர். சுமார் மூன்றுமணி வரை மண் டல அலுவலகம் முன்பு ஊழியர் கள் போராட்டம் நடத்தி வந்த நிலை யில்,தலைமை தொழிற்சங்கங்க ளோடு தமிழக அரசு நடத்திய பேச்சு வார்த்தையில் தொழிற்சங்கங்கள்  முன்வைத்த கோரிக்கை ஏற்கப்படும்  என்கிற உறுதிமொழியை அடுத்து அனைவரும் போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்பினர்.

நீலகிரி

நீலகிரி மாவட்டம், குன்னூரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சிஐடியு நீலகிரி மாவட்ட டாஸ்மாக் ஊழியர் சங்கத்தின் மாவட்ட தலை வர் ஜெ.ஆல்தொரை தலைமை தாங்கினார். இதில் மாவட்ட செய லாளர் மகேஷ், மாநிலக்குழு உறுப் பினர் நவின் சந்திரன், நிர்வாகிகள் சிவ குமார், தியாகராஜன், பாலசுப்ரமணி, ஜெயம்ராஜ் மற்றும் ஆட்டோ சங்க  தலைவர் ரபீக் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

திருப்பூர்

திருப்பூர் மாவட்ட டாஸ்மாக் ஊழி யர்கள் வெள்ளியன்று கடைகளை திறக்காமல், மாவட்ட டாஸ்மாக் அலுவலகத்தை முற்றுகையிட்டுப் போராடினர். பின்னர் அலுவலக வளாகத்தில் அமர்ந்து கோரிக்கை களை வலியுறுத்தி தர்ணா போராட் டத்தில் ஈடுபட்ட பிறகு கோரிக்கை அடங்கிய மனுவை மாவட்ட டாஸ் மாக் மேலாளரிடம் வழங்கினர். இதில் 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். வழக்கமாக பகல் 12 மணிக்கு டாஸ்மாக் கடை திறப்பதற்கு மாறாக பிற்பகல் 4 மணியளவில் கடை கள் திறக்கப்பட்டன. 

தருமபுரி

தருமபுரி டாஸ்மாக் குடோனில் ஊழியர்கள் உள்ளிருப்பு போராட் டத்தில் ஈடுபட்டனர்.  தருமபுரி மாவட்ட டாஸ்மாக் ஊழியர்கள் மதுபானக்கிடங்கில் கருப்பு பேட்ஜ் அணிந்து, மெழுகுவர்த்தி ஏந்தி  இறந்த ஊழியருக்கு அஞ்சலி செலுத் தினர். பின்னர்  300க்கும் மேற்பட் டோர் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். ஊழியர்களின் போராட் டம்  காரணமாக தருமபுரி மாவட்டம் முழுவதும் உள்ள 59 அரசு மதுக்கடை கள் திறக்கப்படவில்லை.

நாமக்கல்

நாமக்கல் மாவட்டம் டாஸ்மாக் மாவட்ட தலைமை அலுவலகம் முன்பு டாஸ்மாக் ஊழியர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து பணியை புறக் கணித்து போராட்டத்தில் ஈடுபட்ட னர். இந்த போராட்டத்தில் நாமக்கல் மாவட்ட டாஸ்மாக் ஊழியர் சங்கத் தின் மாவட்ட செயலாளர் பி.அசோக்,  மாவட்டப் பொருளாளர் குணசேக ரன், துணைச் செயலாளர் சுந்தர மூர்த்தி, சிஐடியு மாவட்டச் செயலாளர் ந.வேலுசாமி உட்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக மறைந்த ஊழியர் ராஜாவிற்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.