tamilnadu

img

தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம் அமைப்பு தினம்

பொள்ளாச்சி, பிப். 15-  தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் அமைப்பு தினத் தையொட்டி, மூன்று மையங்களில் தமிழ்நாடு  மலைவாழ் மக்கள் சங்கத்தின்  சிறப்பு பொதுக்கூட்டங்கள் நடைபெற் றது. கோவை மாவட்டம், பொள்ளாச்சியை  அடுத்த ஆனை மலை மேற்கு தொடர்ச்சி மலைக்குட்பட்ட 15 வனகிரா மங்களில் தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் 29 ஆவது அமைப்பு தினத்தையொட்டி, சங்கத்தின் கிளைகள் வாரியாக சிறப்பு பொதுக்கூட்டங்கள் வெள்ளியன்று நடை பெற்றது. இக்்கூட்டங்கள் ஆழியார் மற்றும் அன்புநகர், பந்தகாலம்மன்பதி ஆகிய மூன்று மையங்களை தலைமை யிடமாக கொண்டு நடத்தப்பட்டன.  இந்த பொதுக்கூட்டத் திற்கு மலைவாழ் மக்கள் சங்கத்தின் ஆனைமலை ஒன்றிய தலைவர் ஏ.அம்மாவாசை  தலைமை வகித்தார். ஒன்றிய செயலாளர் கே.பத்மினி வரவேற்று பேசினார். தமிழ்நாடு மலைவாழ்மக்கள் சங்கத்தின் கோவை மாவட்ட தலை வர் வி,எஸ்.பரமசிவம் சிறப்புரையாற்றினார். இதில், நூற்றுக்கும் மேற்பட்ட மலைவாழ் மக்கள் கலந்து கொண்டனர்.

;