tamilnadu

img

கோபி அருகே குடிநீர் கேட்டு சாலை மறியல்

கோபி, ஜூலை 29-  கோபி அருகே உள்ள அளுக்குளி கிராமத்திற்கு சீரான குடிநீர் விநியோ கம் செய்ய வலியுறுத்தி அப்பகுதி மக்கள் காலிக்குடங்களுடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.  ஈரோடு மாவட்டம், கோபிசெட்டி பாளையம் அருகே உள்ள அளுக்குளி ஊராட்சிக்குட்பட்ட ஒட்டர்கரட்டுப் பாளையம் கிராமத்தில் சுமார் 3 ஆயி ரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு அளுக் குளி ஊராட்சி சார்பில் ஆழ்துளைக் கிணறு மூலம் ஒரேஒரு சின்டெக்ஸ் தொட்டி அமைத்து இரண்டு நாட்க ளுக்கு ஒருமுறை ஒரு மணி நேரம் மட் டுமே குடிநீர் விநியோகம் செய்யப் பட்டுவந்தது. இப்பகுதி பொதுமக்கள் ஆற்றுநீர் விநியோகம்செய்யவேண் டும் என கடந்த பல வருடங்களாகப் போராடி வருகின்றனர்.  இந்நிலையில், தற்போது ஏற்பட் டுள்ள தண்ணீர் பற்றாக்குறையால் ஆழ்துளைக் கிணறுகளில் தண்ணீர் இல்லாத சூழ்நிலை ஏற்பட்டது. இத னால் தற்போது குடிநீருக்காக ஒரு கிலோ மீட்டர் தூரம் சென்று குடிநீர் கொண்டு வருகின்றனர். இது குறித்து மாவட்ட நிர்வாகத்திற்குப் பல முறை மனு அளித்துள்ள போதும் குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை. எனவே வேறு வழியின்றி ஒட்டர்கரட் டுப்பாளையம் பகுதி மக்கள் காலிக் குடங்களுடன் கோபி-கோவை சாலை யில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட னர். தகவலறிந்து கடந்தூர் காவல் துறையினர், கோபி வட்டார வளர்ச்சி அலுவலர் ஆகியோர் சம்பவ இடத் திற்குச் சென்று போராட்டத்தில் ஈடு பட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.  அப்போது வட்டார வளர்ச்சி அலு வலர் சுமதி, அளுக்குளி ஊராட்சியி லிருந்து குடிநீர் வரி செலுத்துவதில்லை என்றும், ஒட்டர்கரட்டுப்பாளையம் கிராமத்திற்கு ஆற்று நீர் விநியோகம் செய்யவேண்டும் என பட்டியலில் இல்லை என்றும் தெரிவித்ததால் பொதுமக்கள் ஆத்திரமடைந்து வட் டார வளர்ச்சி அலுவலரிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர்.  தண்ணீர் வழங்காதவர்கள் ஏன் வாக்கு கேட்டு வருகிறார்கள் என்றும், தண்ணீர் விநியோகம் செய்யப்பட வில்லை என்றால் குடும்ப அட்டை கள், வாக்காளர் அடையாள அட்டை மற்றும் ஆதார் அட்டை உள்பட அரசு அங்கீகார அட்டையாள அட்டை களை அரசுக்குத் திரும்ப ஒப்படைப்ப தாகவும் கூறினர். 10 நாட்களுக்குள் குடிநீர் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று வட்டார வளர்ச்சி அலுவலர் சுமதி மற்றும் கடத்தூர் காவல் துறையி னர் உறுதியளித்ததைத் தொடர்ந்து போராட்டதைக் கைவிட்டு களைந்து சென்றனர். இதனால் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.