tamilnadu

img

குரூப் பி,சி,டி பிரிவுகளில் ஆட்குறைப்பு நடவடிக்கை

கோவை, ஆக.20– அதிகாரிகளின் பணியிடங்கள் மற்றும் பதவி உயர்வை தேவைக்கு அதிகமாக நிரப்புவதும், மக்களுக்கு நேரிடையாக சேவை செய்யும்  குரூப் பி,சி,டி பிரிவுகளில் ஆட்குறைப்பு நட வடிக்கை மேற்கொள்ளும் ஊழியர் விரோத நடவடிக்கையை கண்டித்தும் கோவையில் செவ்வாயன்று இபிஎப் ஊழியர்கள் கண்டன குரல் எழுப்பும் போராட்டத்தில் ஈடுபட்டனர். வருங்கால வைப்புநிதி ஊழியர் சங்கம் சார்பாக கோவை பாலசுந்தரம் சாலையில் உள்ள வருங்கால வைப்புநிதி அலுவலகத்தில் நடை பெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் கிளை தலைவரும், சிபிஎம் கோவை நாடாளுமன்ற உறுப்பினருமான பி.ஆர்.நடராஜன் தலைமை தாங் கினார்.  இதில், குரூப் பி, சி மற்றும் டி பிரிவு களில் உள்ள பதவிகளில் ஆட் குறைப்பு நடவடிக்கையை கைவிட வேண்டும். காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும். அதே சமயம் குரூப்  ஏ பிரிவு பதவிகளில் புதிதாக அதிகாரி களை தேவைக்கு அதிக அளவு சேர்ப்பதை நிறுத்த வேண்டும், குரூப் பி, சி மற்றும் டி ஊழியர்களுக்கு உரிய காலத்தில் பதவி உயர்வு மற்றும் ஊதிய உயர்வு அளிக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி குரல் எழுப்பும் போராட்டம் நடைபெற் றது. இந்த போராட்டத்தில் கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நட ராஜன் பேசுகையில், களத்திலேயே ஊழியர்கள் ஒன்றுபட்டு போராட் டத்தை முன்னெடுக்க வேண்டும். இபிஎப் துறையில் அதிகாரிகளின் ராஜ்யமாக இருக்கிறது. கீழ்நிலை ஊழியர்களின் பணிச்சுமையை கருத்தில் கொள்ளாமல் இருப்பது, 30 ஆண்டுகள் பணி செய்தாலும் பதவி உயர்வு விவகாரத்தில் தலை யிடாமல், தங்களுக்கு மட்டும் பதவி உயர்வு ஊதிய உயர்வில் நாட்டம் செலுத்துவது என்கிற நிலை உள்ளது. இந்நிலையில் இ.பி.எப் ஊழியர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறை வேற்ற உரிய தலையீட்டை செலுத் துவேன் என்றார்.  முன்னதாக, இபிஎப் ஊழியர் சங்கத்தின் கிளை செயலாளர் ஜி. சுப்பிரமணி கூறுகையில், கடந்த பத்து  நாட்களுக்கு மேலாக இபிஎப் துறை  மற்றும் மத்திய அரசின் ஊழியர் விரோத நடவடிக்கையை கண் டித்து கருப்பு பட்டை அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டோம். தற் போது உணவு இடைவேளை ஆர்ப்பாட்டம் நாள்தோறும் நடத்த உள்ளோம். இதன்தொடர்ச்சியாக வரும் 28 ஆம் தேதி ஒரு நாள் அடை யாள வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக தெரிவித்தார். இப்போராட்டத்தில் சங்கத்தின் நிர்வாகிகள் செபஸ்டின், ஈஸ்வரன் உள்ளிட்ட ஏராளமான ஊழியர்கள் பங்கேற்று கோரிக்கைகளை வலியு றுத்தி முழக்கங்களை எழுப்பினர்.