தருமபுரி, ஜூலை 1- நூறு நாள் திட்டத்தில் வேலை கேட்டு சாணரப்பட்டி கிராம மக்கள் தருமபுரி மாவட்ட ஆட்சியர் எஸ்.மலர்விழியிடம் மனுகொடுத்துள்ளனர். தருமபுரி மாவட்டம், பென்னாகரம் வட் டம், பெரும்பாலை ஊராட்சிக்குட்பட்டது சாணரப்பட்டி. இக்கிராம மக்கள் தினக்கூ லியை நம்பியே வாழ்க்கை நடத்தி வரு கின்றனர். இந்நிலையில் இவர்களுக்கு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி சட்டமே கை கொடுத்து வந்தது. ஆனால் கடந்த 4 மாதங்களாக இச்சட்டப் படி சாணரபட்டி கிராம தொழிலாளர்க ளுக்கு வேலை வழங்கப்படவில்லை. இதனால் இம்மக்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கின்றனர். குறிப்பாக வித வைகள், மாற்றுத்திறனாளிகள் என அனைத்து தரப்பு மக்களும் வேலையில்லா மல், வாழ்க்கை நடத்த சிரமப்படுகின்றனர். எனவே மாகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் வேலை வழங்க வேண்டும் என ஆட்சியரிடம் வலி யுறுத்தியுள்ளனர்.