கோவை ஜீவா நகரில் 40 ஆண்டுகளுக்கு மேலாக வசித்து வரும் மக்களை அரசு நிர்வாகம் வெளியேற்ற முயற்சிக்கும் நடவடிக்கையைக் கண்டித்து அப்பகுதி மக்கள் தொடர்ச்சியான போராட்டத்தை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜனை சந்தித்த ஜீவாநகர் பகுதி மக்கள் தங்களின் வாழ்விடத்தைப் பாதுகாக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி மனு அளித்தனர்.
********************
கோவையில் இயங்கி வரும் மத்திய அரசு அச்சகத்தை இடமாற்றம் செய்ய மத்திய பாஜக அரசு முயற்சி மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் மத்திய அரசின் முடிவில் தலையிட்டு கோவையிலேயே தொடர்ந்து அச்சகம் செயல்பட வழிவகுக்க நாடாளுமன்றத்தில் குரலெழுப்பக்கோரி அந்நிறுவன ஊழியர்கள் கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜனை சந்தித்து வேண்டுகோள் விடுத்தனர்.