அவிநாசி, ஜூலை 27- அவிநாசி ஒன்றியங்களில் உள்ள நீர் வழிப்பாதையை ரியல் எஸ்டேட் பிரமு கர்கள் மற்றும் பெட்ரோல் பங்க் உரிமை யாளர்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாக சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டி உள்ளனர். அவிநாசி ஒன்றியத்தில் உள்ள தெக் கலூர், ஆட்டையாபாளையம், மடத்துப் பாளையம் மற்றும் சேவூர் உள்ள நீர் வழிப் பாதையை ரியல் எஸ்டேட் பிரமுகர்கள், பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள், சில குடியிருப்புவாசிகள் மண்ணைக் நிரப்பி ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். இதனால் மழைநீர் குளம் மற்றும் குட்டைகளுக்கு செல்ல வழியில்லாமல் தடுத்து நிறுத்தப் படுகின்றன. இதைக் கண்காணிக்க பொதுப்பணித்துறை மற்றும் வருவாய்த் துறையினர் அலட்சியம் காட்டி வரு கின்றனர். இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் தெரி விக்கையில், தமிழகம் முழுவதும் குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. அவிநாசி வறட்சி நிறைந்த பகுதியாகும். இங்குள்ள விளைநிலங்களுக்கு போதிய நீர் கிடைப் பதில்லை. இதனால் விவசாய நிலங்கள் தற்போது ரியல் எஸ்டேட் பிரமுகர்களால் வீட்டு மனைகளாக மாற்றப்பட்டு வரு கின்றது. மேலும் ஆழ்குழாய் கிணற்றின் நீர் மட்டம் ஆயிரம் அடிக்கு கீழே சென்று விட்டது. இதற்கு நிலத்தடி நீர்மட்டம் உயர்வதற்கு ஆதாரமாக இருந்தது குளம், குட்டைகள் தான். ஆனால் குளம், குட்டை களுக்கு வரும் நீர் வழிப்பாதைகள் அடைக்கப்பட்டுள்ளது. இதனால் குளம் குட்டைகளில் மழைநீரை சேகரிக்க முடி யாத அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. ஆகவே,நீர் வழிப்பாதை ஆக்கி ரமிப்பை அகற்றி குளம், குட்டைகளில் மழை நீர் சேமிக்க பொதுப்பணித்துறையினர் மற்றும் வருவாய்த்துறையினர் நடவ டிக்கை எடுக்க வேண்டுமென சமூக ஆர்வ லர்கள் தெரிவித்தனர். இந்நிலையில், ஆக்கிரமிப்புகளை அகற்றுவது குறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் கேட்பதற்கு தொலைபேசி மூலம் செய்தியாளர் அழைத்தும், அதிகாரிகள் தொலைபேசியை எடுக்கவில்லை.