tamilnadu

நாமக்கல் தருமபுரி முக்கிய செய்திகள்

மின்தடை

நாமக்கல், செப்.17- நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் துணை மின்நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் நடைபெறு வதால் புதனன்று (செப். 18) காலை 9 மணி முதல் மாலை 2 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படும் என்று மின்வாரியச் செயற்பொறியாளர் எஸ்.நாகராஜன் தெரிவித்துள்ளார்.  இதனால் ராசிபுரம், முத்துக்காளிப்பட்டி, மசக்காளிப்பட்டி, புதுப்பாளையம், பட்டணம் முனியப்பம்பாளையம், வடுகம், கவுண்டம்பாளை யம், முருங்கப்பட்டி, போடிநாயக்கன்பட்டி, மோளப்பாளையம், அரசப்பாளையம், வேலம்பாளை யம், வெள்ளாளப்பட்டி, கூனவேலம்பட்டிபுதூர், கதிராநல்லூர், நத்தமேடு, கண்ணூர்பட்டி, சிங்க ளாந்தபுரம், குருசாமிபாளையம் மற்றும் அவற்றின் சுற்றுப்புறப் பகுதிகளில் மின் விநியோகம் இருக் காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொழிலாளர் நல பாதுகாப்பு சட்ட உரிமைகளை நடைமுறைப்படுத்த கோரிக்கை

தருமபுரி, செப்.17- தொழிலாளர் நல பாதுகாப்பு சட்ட உரிமைகளை நடைமுறைப்படுத்த அரசு அலுவலர்கள், மாதர் சங்கம், தொண்டு நிறுவனங்கள் பங்கேற்ற ஆலோச னைக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. பெண் தொழிலாளர்கள் பிரச்சனை குறித்து அரசு அலுவலர்கள், தொண்டு நிறுவனங்கள், மாதர் சங்கங்கள், தொழிற்சங்கங்கள் மற்றும் பெண் தொழி லாளர்கள் பங்கேற்கும் ஆலோசனைக் கூட்டம்  செவ்வாயன்று தருமபுரி சந்தரா மஹாலில் நடை பெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்திற்கு மாவட்ட குழந்தை நல அலுவலர் எம்.சிவகாந்தி தலைமை வகித்தார். தொழிற் கூட்டமைப்பு தலைவர் எம்.சங்கர்  வரவேற்றார்.   அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க மாவட்ட செயலாளர் எஸ்.கிரைஸாமேரி, வழக்கறி ஞர் ரவி, சைல்டு லைன் பொறுப்பாளர் சைன்தாமஸ் மற்றும் தொண்டு நிறுவன கூட்டமைப்பு தலைவர் கள் உள்ளிட்டோர் பங்கேற்று பேசினர். இதில் தருமபுரி மாவட்டத்தில் அதிகளவில் பெண்கள் மற்றும் பெண் குழந்தைகள் தங்களின்  வாழ்வாதார தேவைக்காக பல்வேறு தொழில்களில் ஈடுபட்டுள்ளனர். குறிப்பாக ஆயத்த ஆடை தொழிற்சாலை மற்றும் நூற்பாலைகளில் பணியாற்றி  வருகின்றனர். இவர்கள் வேலைசெய்யும் பணிச்சூழல் பல்வேறு இடங்களில் வன்முறைக்குட்பட்டதாக உள்ளது. வன்முறை என்பது உடல், மணம், செயல் பாதிப்பு மட்டுமல்லாமல் சில அடிப்படை தேவை களையும், வசதிகளையும் செய்ய மறுப்பதும் வன்முறையாகும். குறிப்பாக பணி நேரங்களில் ஓய்வு மறுக்கப்படுவது, கழிவறைகள், குடிநீர் பயன்படுத்த முடியாத நிலை, அதிக நேரம் வேலை வாங்குவது, அதற்கான ஊதியம் வழங்க மறுப் பது, அரசு விடுமுறைகள் மறுப்பது, வீட்டினருடன் பேச மறுப்பது, மருத்துவ வசதியின்மை போன்ற வையும் வன்முறையாகும். எனவே மாவட்டத்தில் உள்ள அனைத்து தொழிற்சாலைகளிலும்  மாவட்ட தொழிலாளர் நல  அலுவலர் ஆய்வு நடத்தி கண்காணிக்க வேண்டும். தொழிலாளர்களிடம் பேசி அவர்களின் குறைகளை கேட்டு பிரச்சனைகளை தீர்க்க நடவடிக்கை  எடுக்கவேண்டும். 10 பெண் தொழிலாளர்களுக்கு மேல்  உள்ள அனைத்து தொழிற்சாலைகளிலும்  பெண்தொழிலாளர்கள் வன்முறை தடுப்பு, பாதுகாப்பு புகார் குழு அமைக்க வேண்டும். விடுதியு டன் கூடிய தொழிற்சாலைகளில் விடுதி பதிவுச் சட்டம் 2014-ன் படி சமூகநலத்துறையில் பதிவு செய்திருக்க வேண்டும். மத்திய, மாநில அரசுகளில் தொழிலாளர் பாதுகாப்பு நலசட்ட உரிமைகள் நடைமுறைப்படுத்துவதை உறுதி செய்ய வேண்டும். மாவட்ட அளவில் பெண்தொழிலாளர் பாது காப்பு மற்றும் பணிப்பாதுகாப்பு கருதி கண்காணிப் புக்குழு அல்லது ஆய்வுக்குழு,  மாவட்ட தொழிலாளர் நல அலுவலர், சமூகநல அலுவலர், குழந்தைகள் பாது காப்பு அலுவலர், கல்வித்துறை அலுவலர், மருத்து வத்துறை அலுவலர், காவல்துறை, வழக்கறிஞர்கள், மக்கள் பிரதிநிதிகள், சமூக அமைப்புகொண்ட குழு உருவாக்கவேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மக்கள் தொடர்பு திட்ட முகாம் 

தருமபுரி, செப்.17- தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி வட்டம்,  கடத்தூர்  உள்வட்டம்,  மணி யம்பாடி கிராமத்தில் வரும் செப்.25 தேதியன்று காலை 10 மணிக்கு மாவட்ட வருவாய் அலுவலர் எச்.ரஹமத்துல்லா கான் தலைமையில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடை பெற உள்ளது. இம்முகாமில் அனைத் துத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டு தங்களது துறைகளின் திட்டங்கள் குறித்து எடுத்துரைக்க  உள் ளார்கள். எனவே தருமபுரி பாப்பி ரெட்டிப்பட்டி வட்டம்,  கடத் தூர்  உள்வட்டம்,   மணியம்பாடி கிராமம் மற்றும் அதன் சுற் றுப்புற கிராமங்களைச் சேர்ந்த  பொதுமக்கள் தங்கள் கோரிக் கைகள் அடங்கிய மனுக்களை வழங்கி பயன்பெறுமாறு மாவட்ட வருவாய் அலுவலர் எச்.ரஹமத்துல்லா கான்  தெரிவித்துள்ளார்.