சேலம், ஜூன் 11- குடிநீர் கேட்டு ஆவடத்தூர் ஊராட்சி அலுவலகத்தில் மாதர் சங்கம் சார்பில் மனு அளித்தனர். சேலம் மாவட்டம், நங்கவள்ளி, ஆவ டத்தூர் ஊராட்சி கோபாலபுரம் பகுதியில் இரண்டு மாதகாலமாக குடிநீர் கிடைக்காத நிலை உள்ளது. இதனைக் கண்டித்து ஊராட்சி செயலரிடம் பலமுறை மனு அளித்தும் எவ்வித நடவடிக்கை எடுக்க வில்லை. இந்நிலையில் செவ்வாயன்று ஆவடத்தூர் ஊராட்சி அலுவலகத்தில் மாதர் சங்கம் சார்பில் மனு அளித்தனர். முன்னதாக, கோபாலபுரம் மாதர் சங்க கிளை செயலாளர் சாந்தாமணி தலைமை யில் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்க ளிடம் கையெழுத்து இயக்கம் நடை பெற்றது. இதில் சங்கத்தின் மாவட்ட துணை தலைவர் கே.ராஜாத்தி, ஒன்றிய செயலாளர் ஜி.கவிதா மற்றும் கிளை நிர் வாகிகள், ஊர் பொது மக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.