tamilnadu

நில மோசடி பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் ஒருங்கிணைப்பாளர் உள்ளிட்ட 3 பேர் மீது வழக்குப்பதிவு

 கோவை, ஆக. 2 -  பணத்தைப் பெற்றுக் கொண்டு வீட்டு மனைகளைப் பதிவு செய்து தராமல், வேறு ஒருவருக்கு விற்பனை செய்து மோசடி செய்ததாக பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் ஒருங்கிணைப் பாளர் உள்ளிட்ட 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள் ளது.  கோவை மசக்காளிபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் தனலட்சுமி. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அன்னூர் பகுதியில் செல்வநாயகி புரமோட்டர்ஸ் என்ற ரியல் எஸ்டேட் நிறுவனம் ஒரு வீட்டுமனை ஒரு லட்சத்து 35 ஆயி ரம் ரூபாய்க்கு விற்பனை செய்வதாக விளம்பரம் செய்துள் ளது. இதனைப்பார்த்த தனலட்சுமி காந்திபுரம் பகுதியில் உள்ள அந்நிறுவன அலுவலகத்திற்குச் சென்று விசாரித்து, பணமும் கட்டியுள்ளார். மேலும் 3 லட்ச ரூபாய் கொடுத் தால், 4 சைட்டுகளை வாங்கிக் கொள்ளலாம் என அந்நிறு வன உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். இதன் பேரில் தனலட்சுமி தவணை முறையில் 3 லட்ச ரூபாய் பணத்தைக் கட்டியுள்ளார்.

இந்நிலையில், வீட்டுமனைகளைப் பதிவு செய்து தராமல் அந்நிறுவன உரிமையாளர்கள் காலம் தாழ்த்தி வந்துள்ளனர்.  இதுகுறித்து விசாரிக்க தனலட்சுமி காந்திபுரம் அலுவல கம் சென்றபோது, அந்த அலுவலகம் காலி செய்யப்பட்டு இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். இதையடுத்து அன்னூரில் உள்ள வீட்டு மனைக்குச் சென்று பார்த்த போது, அந்த வீட்டுமனைகள் வேறொருவருக்கு விற்பனை செய் யப்பட்டு இருப்பதும் தெரியவந்தது.  மேலும் பணத்தை திருப்பித்தராமல் இழுத்தடித்தும் வந்துள்ளனர். இதுதொடர்பாக காட்டூர் காவல் நிலையத் தில் தனலட்சுமி புகார் அளித்தார். இதன் பேரில் அந்நிறுவன உரிமையாளர்களான கோவை மாவட்ட பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார் மற்றும் ஈஸ்வரன், கிருஷ்ணகுமார் ஆகிய 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

;