tamilnadu

img

சர்வதேச ஆதிவாசிகள் தினம் கொண்டாட்டம்

பொள்ளாச்சி, ஆக.10-   பொள்ளாச்சியை அடுத்த ஆனைமலை குன்றுகளில் சர்வதேச ஆதிவாசிகள் தினம் கொண்டாடப்பட்டது.  கோவை மாவட்டம், பொள்ளாச்சியை அடுத்து ஆழி யார், அன்புநகர், புளியங்கண்டி, சின்னார்பதி, நாகரூத்து, சர்கார்பதி உள்ளிட்ட 17 வன கிராமங்களில் தமிழ்நாடு மலை வாழ் மக்கள் சங்கத்தின் சார்பில் சர்வதேச ஆதிவாசிகள் தினம் கொண்டாப்பட்டது. இந்நிகழ்வில் மலைவாழ் மக்கள் சங்கத்தின் கோவை மாவட்ட செயலாளர் வி.எஸ்.பரம சிவம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இதில், வன உரிமைச் சட்டம் 2006 ஐ அமல்படுத்த வேண்டும். அனைத்து பழங்குடியின குடும்பங்களுக்கும் பழங்குடியின நலவாரிய அட்டையை உடனடியாக வழங் கிட வேண்டும். சிதிலமடைந்த பழங்குடியின குடும்பங்க ளின் வீடுகளை சீரமைத்து புதிய வீடுகள் கட்டித்தர வேண் டும். பழங்குடியின மக்களுக்கு  அனுபவ நிலப்பட்டா வழங் கிட வேண்டும். அனைத்து வன கிராமங்களுக்கும் மின்சா ரம் வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.