அவிநாசி, அக். 6- அவிநாசியில் பொறி வியாபாரம் வீழ்ச்சியடைந்துள்ளதால் வியாபாரி கள் வேதனையடைந்துள்ளனர். ஆயுத பூஜை என்றாலே தவிர்க்க முடியாதவைகளுள் பொறியும் ஒன்று. ஆண்டு முழுவதும் வேலை செய்த இயந்திரங்கள், வாகனங்கள் என கரு விகளாகப்பட்ட அனைத்தையும் சுத்தம் செய்து, கழுவி வணங்குவர். இந்த கொண்டாட்டத்தில் பொறி, கடலை வாங்கி அனைவருக்கும் வழங்குவது வாடிக்கையான ஒன்று. அவிநாசி பகுதியிலும் ஆயுத பூஜை சிறப்பாகக் கொண்டாடப்படும். இதனையொட்டி ஆண்டு தோறும் மிகப்பெரிய அளவிற்கு பொறி வியாபாரம் நடைபெறுவது வழக்கம். இந்தாண்டு வழக்கம்போல பல்லாயிரம் ரூபாய் மதிப்பில் மூல பொருட்கள் கொள்முதல் செய்து பொறி தயாரிப்பில் ஈடுபட்டுள்ளனர். 80க்கும் மேற்பட்ட வியாபாரிகள் விற்பனையை தொடங்கி உள்ளனர். இந்நிலையில், ஆயுதபூஜைக்கு குறிப்பிட்ட அளவில் பொறி விற் பனை நடைபெறும் என எதிர்பார்த்த வியாபாரிகள் மிகப்பெரிய ஏமாற்றத் தைச் சந்தித்துத்ளனர். இதுகுறித்து திருஞானம் என்ற பொறி வியாபாரி கூறுகையில், வரு டம்தோறும் ஆயுத பூஜை நாளன்று 80 மூட்டை பொறி விற்பனை நடை பெறும். தற்போது வெறும் 15 மூட்டைகளில் கூட விற்க முடிய வில்லை. நான்கு ஊழியர்களைப் பயன்படுத்தி பொறி தயார் செய்ய மூன்று நாட்கள் ஆகின்றது. ஒரு ஊழி யருக்கு சராசரியாக 450 ரூபாய் தினசரி கூலியாக கொடுக்கின்றோம். தற்போது போட்ட கொள்முதலை கூட எடுக்க முடியாத சூழ்நிலையில் தள்ளப்பட்டிருக்கிறோம். இதற்குக் காரணம் கம்பெனிகள் சரியாக இயங் கவில்லை. விடுமுறை நாளான ஆயுத பூஜை நாட்களில் இயந்திரங்களை பயன்படுத்தும் சிறு, குறு வியாபாரி கள் தங்களால் வழிபாடு செய்ய முடியாத சூழ்நிலைக்கு தள்ளப்பட்டு இருப்பதாகத் தெரிகிறது. வரும் காலங்களில் அரசுகள் சிறு, குறு தொழில்கள் பாதிப்பில் லாமல் இருக்க வழிவகை செய்து, எங்கள் வாழ்வாதாரத்தையும் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்தார். (ந.நி)