முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கைதை கண்டித்து ஈரோடு தெற்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் மூலப்பாளையம், எல்.ஐ.சி.நகர் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் மாவட்ட தலைவர் மக்கள் ராஜன், சட்டமன்ற முன்னாள் உறுப்பினர் பழனிச்சாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.