tamilnadu

போலி ஆதார் அட்டை- ஒருவர் கைது

கோவை, ஜூலை 21- கோவை சூலூர் விமானப் படைத்தளத்தில் போலி ஆதார் அட்டையை பயன்படுத்தி பணிக்கு சேர்ந்த ஒப்பந்த தொழி லாளியை காவல் துறையினர் கைது செய்தனர். கோவை மாவட்டம், சூலூர் விமானப் படைத் தளத்தில் ஒப்பந்த அடிப்படையில் கட்டிட வேலை செய்து வந்தவர் பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர் சம்சுதீன் (26). இந்நிலையில், இவர் போலி ஆதார் அட்டையை பயன்படுத்தி பணிக்கு சேர்ந்த தாக சூலூர் விமானப் படைத் தள உதவி பாதுகாப்பு அதிகாரி ஜஸ்விந்தர் சிங் சூலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இதன் பேரில் சூலூர் காவல் துறையினர் 3 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில் சம்சுதீன் தனது அண்ணனின் ஆதார் அட்டை எண்ணை பயன்படுத்தி வேலைக்கு சேர்ந்தது தெரியவந்தது. இதையடுத்து சம்சுதீனை கைது செய்த காவல் துறையினர் தீவிர விசாரணையை நடத்தி வருகின்றனர்.

;