tamilnadu

img

கனரக வாகனங்களுக்கான எப்சி, இன்சூரன்ஸ், கடன் தவணை காலத்தை நீட்டித்திடுக

சிஐடியு சாலை போக்குவரத்து சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

கோவை, மே 14 - சாலைப் போக்குவரத்தில் ஈடு படும் வாடகை வாகனங்களுக் கான எப்சி, இன்சூரன்ஸ்  மற்றும் கடன் தவணை ஆகியவற்றிற் கான தவணை காலத்தை நீட் டிக்க வேண்டும் என்பன உள் ளிட்ட கோரிக்கைகளை வலியு றுத்தி கோவையில் சாலைப் போக்குவரத்து தொழிலாளர் சங் கத்தினர் பல்வேறு பகுதிகளில் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர்.

ஊரடங்கு அமுலிலுள்ள இக் காலத்தில் இலகுரக, கனரக மற் றும் சுற்றுலா வாகன ஓட்டுனர்கள் மற்றும் வாகன உரிமையாளர்கள் சொல்லொன்னா துயரத்தை அனுபவித்து வருகின்றனர். இவர் களுக்கான நிவராணத் தொகை யாக  ரூ. 7500 வழங்க வேண் டும். பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி உயர்வை மத்திய மாநில அரசுகள் ரத்து செய்ய வேண்டும். வாகனங்கள் இயங் காமல் உள்ள நிலையில் ஆறு மாதக் கடன் தவணையை கால நீட்டிப்பு செய்வதோடு வட்டியை தள்ளுபடி செய்ய வேண்டும் என் பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோவையில் சாலைப் போக்குவரத்து தொழிலாளர் சங்கத்தினர் பல்வேறு பகுதிகளில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.  கோவை காந்திபுரம், உக்க டம்,  பொள்ளாச்சி, கணபதி, அன் னூர் உள்ளிட்ட பகுதிகளில் நடை பெற்ற ஆர்ப்பாட்டங்களில் சங் கத்தின் மாவட்டச் செயலாளர் ஏ. எம். ரபீக்,  மாவட்டத் தலைவர் வேணுகோபால் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

போக்குவரத்து ஊழியர்கள்

இதேபோல், மத்திய அரசின் வேலை நேர அதிகரிப்பு மற்றும் தொழிலாளர் நலச்சட்டங்களை சீர்குலைப்பதை கண்டித்து கோவையில் சிஐடியு அரசுப் போக்குவரத்து ஊழியர் சங்கத்தி னர் போக்குவரத்துப் பணிமனை களின் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சுங்கம்,  உக்கடம் மற் றும் ஒண்டிப்புதூர் உள்ளிட்ட இடங்களில் நடைபெற்ற ஆர்ப் பாட்டங்களில் போக்குவரத்து ஊழியர்கள் ஏராளமானோர் பங் கேற்றனர்.