சேலம், ஜூலை 13- உள்ளாட்சித் தேர்தலை விரைந்து நடத்த வேண்டும் என வலியுறுத்தி தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கம் சேலம் மாவட்ட மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட் டன. தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் சங்கத்தின் 5 ஆவது சேலம் மாவட்ட மாநாடு சனியன்று சங்கத்தின் மாவட்ட தலைவர் பா.வாசுதேவன் தலை மையில் நடைபெற்றது. மாவட்ட இணைச்செயலாளர் து.பெரிய சாமி அஞ்சலி தீர்மானத்தை முன் மொழிந்தார். மாவட்ட துணைத் தலைவர் க.கோவிந்தராஜீ வர வேற்புரையாற்றினார். மாநில தலைவர் மு.சுப்பிரமணியன் மாநாட்டை துவக்கி உரையாற் றினார். மாவட்ட செயலாளர் த.ஜான்ஆஸ்டின், மாவட்ட பொரு ளாளர் அ.பாஸ்கரன் ஆகியோர் அறிக்கையை முன்மொழிந்து பேசினர். மாநில துணைத்தலை வர் ந.திருவரங்கன், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் இ.கோவிந்தராஜ் உள் ளிட்டோர் வாழ்த்துரை வழங்கி னர்.
தீர்மானங்கள்
தமிழகத்தில் தற்போது உள்ள குடிநீர் பிரச்சனை, வளர்ச்சித் திட்டங்களை நடைமுறைப்ப டுத்த முடியாத சூழ்நிலை நிலவு கிறது. இதனை தவிர்க்க உள் ளாட்சித் தேர்தலை உடனடியாக நடத்திட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். ஊராட்சி செயலாளர் களை அரசு ஊழியர்களாக அறி வித்து அவர்களுக்கு முறைப்படுத் தப்பட்ட ஊதியம் வழங்க வேண் டும். ஊரக வளர்ச்சித் துறையில் நீண்ட நாட்களாக நிரப்பப்படா மல் உள்ள காலிப்பணியிடங் களை நிரப்ப வேண்டும். உள்ளாட் சித் துறையில் நிலவும் அரசியல் தலையீட்டை தடுக்க அரசு நடவ டிக்கை எடுக்க வேண்டும். 30க்கும் மேற்பட்ட ஊராட்சிகள் கொண்ட தலைவாசல், அயோத்தியாப்பட் டணம், பெத்தநாயக்கன்பாளை யம், ஓமலூர் ஆகிய ஊராட்சி ஒன்றி யங்களை பிரித்து புதிய ஊராட்சி ஒன்றியங்கள் உருவாக்கிட வேண் டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட் டன.
புதிய நிர்வாகிகள்
இதைத்தொடர்ந்து மாநாட் டில் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். இதில் மாவட்ட தலைவராக பா.வாசுதேவன், மாவட்டச் செயலாளராக த.ஜான் ஆஸ்டீன், மாவட்ட பொருளாள ராக க.கோவிந்தராஜ் உள்ளிட்ட 17 பேர் கொண்ட மாவட்டக் குழு தேர்ந்தெடுக்கப்பட்டது. முடிவில், மாநில செயலாளர் இரா.ஆறு முகம் மாநாட்டை நிறைவு செய்து உரையாற்றினார்.