tamilnadu

img

மின்சாரம் தாக்கி மின் ஊழியர் பலி

தருமபுரி, ஜூலை 11- தருமபுரி அருகே மின்சாரம் தாக்கி மின் ஊழியர் பரிதாபமாக உயிரிழந்தார். தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப் பட்டி அடுத்துள்ள பூதநத்தம் பகுதியைச் சேர்ந்தவர் பழனி (48). இவர் மின்வாரியத் தில் லைன் மேனாக வேலை  செய்து வரு கிறார். இவருக்கு கல்பனா என்ற மனைவி யும  மூன்று மகள்கள், ஒரு மகன் உள்ளனர். இந்நிலையில் ராமியம்பட்டியில் உள்ள ராமலிங்கம் என்பவரின் தென்னந்தோப் பில் மின்கம்பம் பழுதடைந்ததால் சரி பார்க்க சென்றுள்ளார். அப்போது பழனி மின் இணைப்பை நிறுத்தம் செய்யாமல் இருந்துள்ளார். இதனால் எதிர்பாராத விதமாக பழனி மின்  வயரில் கைவைத்தாபோது மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டார். இதில் பலத்த  காயம் ஏற்பட்ட பழனியை அங்கிருந்தவர் கள் மீட்டு தருமபுரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் பழனி செல் லும் வழியிலேயே பரிதாபமாக உயிரி ழந்தார். இதுகுறித்து தகவலறிந்த கோபிநாதம் பட்டி காவல்துறையினர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இதுகுறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.