கோவை, ஜூலை 22– கோவையில் முதியோர் உத வித்தொகை கேட்டு மனு செய்து நான்கு வருடங்களாக அலைக்கழிக்கும் அவலம் நீடித்து வருவதாக மனு அளிக்கப்பட்டது. கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பத்துக்கும் மேற் பட்ட மூத்த குடிமக்கள் குறை தீர்க்கும் கூட்டத்திற்கு வந்திருந்த னர். தள்ளாத வயதில் யாரை சந் திப்பது எங்கு சந்திப்பது என்பதை அறியாமல் கையில் மனுக்களோடு அல்லாடிக்கொண்டிருந்தனர். கோவை கணபதி மற்றும் கணபதி புதூர் பகுதியை சேர்ந்த கருப் பாத்தாள், சந்திரா, செல்வி ஆகி யோரிடம் விசாரிக்கையில், உடனிருப்பவர்கள் கை விட்ட நிலையில் அரசின்உதவித் தொகைக்காக விண்ணப்பித் தோம். கிராம நிர்வாக அலுவலர் துவங்கி, மாவட்ட ஆட்சியர் அலுவலகம்வரை கடந்த நான்கு வருடங்களில் 19 முறை மனு அளித்துவிட்டோம். ஆனால் இதுவரை எங்களுக்கு எவ்வித உதவித்தொகையும் வரவில்லை. எங்களுக்கு அரசை விட்டால் வேறு நாதியில்லை என்பதால் தொடர்ந்து நம்பிக்கையோடு ஆட்சியர் அலுவலக படியேறிக் கொண்டிருக்கிறோம் என்றனர் பரிதாபமாக. இம்முறையாவது மாவட்ட ஆட்சியர் தனிக்கவனம் செலுத்தி உதவித் தொகை வழங்க வேண்டும் என்ற எதிர்பார்ப்புடன்.
உறைவிடப்பள்ளியும், உழைப்பு சுரண்டலும்
கோவை மாவட்டத்தில் உள்ள உண்டு உறைவிட பள்ளியில் பணியாற்றும் ஊழியர்கள் ஊதி யத்தை உயர்த்திக் கொடுக்க வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரை சந்தித்து கோரிக்கை மனு அளித்த னர். கோவை மாவட்டத்தில் 30க் கும் மேற்பட்ட உண்டு உறைவிட பள்ளிகள் செயல்படுகிறது. இதில் பழங்குடி மற்றும் ஆதிதிராவிட வகுப்பைச் சேர்ந்த மாணவர்கள் தங்கிப் பயின்று வருகின்றனர். பெரும்பாலும் வனம் மற்றும் மலை பகுதிகளிலேயே அமைந்துள்ள இப்பள்ளிகளில் சுத்தம் செய்யும் பணிக்கு 2013 ஆண்டு தொகுப் பூதியத்தில் பணியாற்ற 42 பேர் அருந்ததியர் மற்றும் பழங்குடியி னத்தை சேர்ந்தவர்கள் பணியில் சேர்ந்தோம். எங்களுக்கு மாதம் இரண்டாயிரம் ரூபாய் ஊதியம் வழங்கப்பட்டது. தொடர்ந்து கோரிக்கை வைத்த பிறகு கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு ஆயிரம் ரூபாய் உயர்த்தி, நாள் ஒன்றிற்கு 100 ரூபாய் என்கிற வகையில் மாதம் மூவாயிரம் வழங்கப்பட்டு வருகிறது. கடும் விலைவாசி உயர்வில் இந்த ஊதி யத்தை கொண்டு வாழ்க்கையை நடத்த முடியவில்லை. இதனால் 42 பேர் பணியாற் றிய இடத்தில் தற்போதுவெறும் 17 பேர்களே பணியாற்றி வருகி றோம். மற்றவர்கள் ஊதியம் போதாது என்றுநின்றுவிட்டனர். மேலும்,இந்த குறைந்தபட்ச ஊதியமும்கூட மாதாமாதம் முறை யாக கொடுப்பதில்லை.மூன்று மாதங்களுக்கு ஒருமுறைதான் வழங்கப்படுகிறது. ஆகவே ஊதியத்தை உயர்த்தி, மாதா மாதம் கொடுக்கவும் வேண்டும் என மனுவில் தெரிவித்துள்ளனர். குறைந்தபட்ச கூலி என தமி ழக அரசு நான்காம் நிலை ஊழியர் களுக்கு நகர்ப்புறத்தில் ரூ.525ம் கிராமப்புறத்தில் ரூ.400ம் நிர்ண யிக்கப்பட்டுள்ளது. ஆனால் தொகுப் பூதியம், மதிப்பூதியம் ஆகியவற் றில் பணியாற்றும் ஊழியர்களுக்கு எவ்வித நிர்ணயிப்பும் இல்லாமல் உழைப்பை அரசே சுரண்டுவது எந்த வகையில் நியாயம் என்கிற கேள்வி அரசின் காதுகளுக்கு எட்ட வேண்டும் என்பதே அனை வரது எதிர்பார்ப்பாக உள்ளது.