கோவை, பிப்.10- கோவை மற்றும் நீலகிரி மாவட்டத்தில் திங்களன்று நடைபெற்ற குறைதீர்க்கும் முகா மில் வீட்டுமனைப் பட்டா, முதி யோர் உதவித்தொகை வழங்கக் கோரி ஏராளமானோர் மனு அளித்தனர். கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்களன்று மக்கள் குறைத்தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் கு.இராசாமணி தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் முதியோர் உதவித்தொகை, பட் டாமாறுதல், புதிய குடும்ப அட்டை, வீட்டுமனைப்பட்டா உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை கள் குறித்த 331 மனுக்களை பொது மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் அளித்தனர். இம்மனுக்களை பெற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சியர் சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் கோரிக்கை மனுக்களை வழங்கி குறித்த காலத் திற்குள் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளுமாறு உத்தரவிட் டார். அதனைத்தொடர்ந்து, சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 15 பயனாளிகளுக்கு மாதந்தோ றும் தலா ரூ.1000 உதவித்தொகை பெறுவதற்கான ஆணையும், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்து றையின் மூலம் ஒரு பயனாளிக்கு இலவச தையல் இயந்திரமும், மாற் றுத்திறனாளிகள் நலத்துறையின் மூலம் 4 பயனாளிகளுக்கு தலா ரூ.6200 மதிப்பிலான சக்கர நாற்காலிகளையும், சமூகநலத் துறையின் சார்பில் 10 நபர்களுக்கு மூன்றாம் பாலினத்தவருக்கான அடையாள அட்டைகளையும் மாவட்ட ஆட்சியர் வழங்கினர்.
நீலகிரி
இதேபோல், நீலகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடை பெற்ற குறைதீர் கூட்டத்தில் குடும்ப அட்டை, வீட்டுமனைப் பட்டா, தொழில் மற்றும் கல்விக் கடன் உதவி, முதியோர் உதவித் தொகை, சாலை, குடிநீர், கழிப்பி டம் மற்றும் மின்சார வசதிகள் உள்ளிட்ட பல்வேறு கோரிக் கைகள் அடங்கிய 150 மனுக்களை மாவட்ட ஆட்சியர் ஜெ.இன்ன சென்ட் திவ்யாவிடம் பொது மக்கள் அளித்தனர். இம்மனுக் களை பெற்றுகொண்ட மாவட்ட ஆட்சியர் உடனடியாக நடவ டிக்கை எடுக்க சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். மேலும், இக்கூட்டத்தில் பயனா ளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.