tamilnadu

img

மங்கலத்தில் திமுக கூட்டணி வேட்பாளர்கள் இஸ்லாமிய மக்களிடம் வாக்கு சேகரிப்பு

திருப்பூர், டிச. 20 - திருப்பூர் ஊராட்சி ஒன்றி யம் மங்கலம் கிராமத்தில் இஸ்லாமிய மக்களிடம் திமுக கூட்டணி கட்சிகளின் சார்பில் ஊரக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் ஆதரவு கோரி வாக்கு சேகரித்தனர். மங்கலம் கிராமத்தை உள்ளடக்கிய மாவட்ட ஊராட்சி வார்டு வேட்பாள ராக காங்கிரஸ் வேட்பாளர் ஏ.ராமசாமி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் திருப்பூர் ஊராட்சி ஒன்றிய 8ஆவது வார்டு வேட்பாளர் எஸ்.அப்புசாமி, மற் றொரு ஊராட்சி ஒன்றிய வார்டு வேட்பா ளர் ஜானகி, மங்கலம் ஊராட்சிமன்றத் தலைவர் பதவிக்குப் போட்டியிடும் திமுகவைச் சேர்ந்த எஸ்.என்.பி.மூர்த்தி ஆகியோர் வெள்ளியன்று பிற்பகல்் மங்க லம் பள்ளிவாசல் அருகில் இஸ்லாமியர்க ளிடம் வாக்கு சேகரித்தனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் கே.தங்க வேல், காங்கிரஸ் தலைவர் வே.முத்துராம லிங்கம், மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் செ.முத்துக்கண்ணன், வடக்கு ஒன்றியச் செயலாளர் கே.பழனிசாமி உள்பட கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் இந்த வேட்பாளர்களுக்கு ஆதரவாக வாக்குக் சேக ரித்தனர். இஸ்லாமிய மக்கள் நலன் காக்க இந்த அணியை வெற்றி பெறச் செய்யுமாறு கூட்டணி கட்சி தலைவர்கள் கேட்டுக் கொண்டு ஆதரவு திரட்டினர்.