திருப்பூர், ஆக. 5 – கட்டுமானம் உள்ளிட்ட அனைத்து முறைசாரா தொழில் களிலும் பாடுபடும் தொழிலா ளர்களுக்கு மாதாந்திர ஓய்வூதி யத்தை ரூ.3ஆயிரமாக உயர்த்தி வழங்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திருப்பூர் மேட்டுப்பாளையம் பள்ளிக்கு பின்புறம் சமூக நலத் திட்ட அலுவலகம் முன்பாக திங் களன்று காலை இந்த ஆர்ப் பாட்டம் நடைபெற்றது. இதில் பணப்பயன் கேட்டு விண்ணப் பிக்கும் அனைத்து தொழிலா ளர்களுக்கும், குடும்பங்களுக்கும் உடனடியாக பணப்பயன் வழங்க வேண்டும். திருமண உதவித் தொகை ரூ.50 ஆயிரம், பிரசவ உதவித் தொகை ரூ.30 ஆயிரம் வழங்க வேண்டும். விபத்து நடந்து மரணம் ஏற்பட்டால் ரூ.5 லட்சம் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்க வேண்டும். முதல் வகுப்பில் இருந்து மாணவர்களுக்கு கல்வி உதவி வழங்க வேண்டும் என்று முழக்கங்கள் எழுப்பினர். இந்த ஆர்ப்பாட்டத்துக்கு தமிழ்நாடு விசைத்தறி தொழி லாளர் சம்மேளனத்தின் மாநிலத் தலைவர் பி.முத்துச்சாமி தலைமை வகித்தார். இதில் சிஐடியு நிர்வா கிகள் பி.பாலன், ஒய்.அன்பு, கட்டுமான சங்கப் பொதுச் செய லாளர் டி.குமார், சிஐடியு திருப்பூர் மாவட்டச் செயலாளர் கே.ரங்க ராஜ், மாநில துணை தலைவர் எம்.சந்திரன் ஆகியோர் கோரிக் கைகளை வலியுறுத்திப் பேசினர். இதில் சிஐடியு மாவட்ட தலைவர் கே.உண்ணிகிருஷ்ணன், மாவட்ட நிர்வாகிகள் சி.மூர்த்தி, ஜி.சம்பத், செல்லதுரை உள்பட முன்னூறுக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.