tamilnadu

img

காட்டுப்பன்றிகளால் மக்காச்சோளப் பயிர் சேதம்

இழப்பீடு வழங்க விவசாயிகள் சங்கம் கோரிக்கை

திருப்பூர், டிச. 2 - உடுமலைபேட்டை தாலுகா சாளையூரில் விளைநிலத்தில் காட் டுப்பன்றிகள் புகுந்து பயிரை நாசம் செய்ததில் விவசாயிக்கு பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது. இது போல் ஏராளமான விவசாயிகள் பாதிக்கப்படும் நிலையில் காட்டுப் பன்றிகளைக் கட்டுப்படுத்த நட வடிக்கை எடுப்பதுடன், விவசாயி களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு விவ சாயிகள் சங்கம் வலியுறுத்தி உள்ளது. உடுமலைப்பேட்டை தாலுகா சாளையூரைச் சேர்ந்தவர் ர.சுப்பிர மணி. இவர் சர்க்கார் புதூர் கிராமம் க.ச.எண் 49 மற்றும் 51இல் 3.50 ஏக்கர் பரப்பளவில் மக்காச்சோளம் பயிர் செய்திருந்தார். மக்காச்சோள பயிர் நடவு செய்து பராமரிப்பதற் காக இதுவரை ரூ.1.50 லட்சம் செலவு செய்திருக்கிறார். இப்பகுதி யில் காட்டுப்பன்றிகள் தொல்லை இருப்பதால், அவற்றிடம் இருந்து பயிரைப் பாதுகாப்பதற்காக, இந்த நிலத்தைச் சுற்றி ரூ.15 ஆயிரம் செலவு செய்து, சேலை‌களைக் கட்டி யிருக்கிறார். எனினும் ஞாயிறன்று இரவு இந்த சுற்றுச் சேலைகளைக் கிழித்து காட்டுப் பன்றிகள் நிலத் தில் புகுந்து மக்காச்சோளம் பயிரை நாசம் செய்துள்ளன.

மக்காச்சோளப் பயிர் கதிர் வாங்கி மணி பிடிக்கும் நிலையில் காட்டுப் பன்றிகள் புகுந்து பயிரை நாசம் செய்திருப்பதைப் பார்த்து விவசாயி சுப்பிரமணி கடும் அதிர்ச் சியும் வேதனையும் அடைந்துள் ளார். இது குறித்து தமிழ்நாடு விவசாயி கள் சங்க மாவட்டத் தலைவர் எஸ். ஆர்.மதுசூதனன், மாவட்டச் செய லாளர் ஆர்.குமார் ஆகியோர் விடுத் துள்ள அறிக்கையில் கூறியிருப்ப தாவது: உடுமலை நகரத்தைத் தாண்டி கிராமப் பகுதிகளில் உள்ள ‌பள்ளம், படுகைகளில் காட்டுப்பன் றிகள் குட்டிகள் போட்டு அதிக அள வில் பெருகிவிட்டன. எனவே மாவட்ட நிர்வாகம் இப்பிரச்சனை யில் தலையிட வேண்டும் என்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வலியுறுத்துகிறது. காட்டுப்பன்றி கள் பெரும் வளர்ச்சி பெற்று ஊர் பன்றிகளாக மாறியுள்ளன. இத னால்  பலநூறு விவசாயிகள் பாதிக் கப்பட்டுள்ளனர். இதைப் பற்றி மாநில அரசுக்கு தெரிவித்து பன்றிக ளைக் கட்டுப்படுத்த மாவட்ட நிர் வாகம் நடவடிக்கை எடுக்க வேண் டும் என விவசாயிகள் சங்கம் கேட் டுக் கொண்டுள்ளது.  மேலும் இது நாள் வரை காட்டு பன்றிகளால்‌ விவ சாயிகளுக்கு ஏற்பட்டுள்ள இழப் புக்கு உரிய‌ நஷ்ட ஈடு வழங்க வேண் டும் என்றும் தமிழ்நாடு விவசாயி கள் சங்கம் கேட்டுக் கொண்டுள் ளது.