tamilnadu

கடலூர் மாவட்டத்தில் பரவலாக கொரோனா பரிசோதனை செய்ய சிபிஎம் வலியுறுத்தல்

கடலூர், மே 8- கடலூர் மாவட்டத்தில் பரவலாக கொரோனா பரி சோதனை செய்ய செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்  என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தி உள்ளது. இது தொடர்பாக மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்டச்  செயலாளர் டி.ஆறுமுகம் வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறியிருப்பதாவது: கோயம்பேடு சந்தையில் பணியாற்றும் தொழிலா ளர்களுக்கு ஏற்பட்ட தொற்றால் கடலூர் மாவட்டத்தில்  பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 350ஐ தாண்டி யுள்ளது. துவக்க நிலையில் உள்ளவர்களுக்கு வீட்டில்  இருந்தே சிகிச்சை அளிக்கப்படும் என அறிவிக்கப் பட்டுள்ளது. அடிப்படை வசதி கூட இல்லாத வீடுகள்  பல உள்ளன. எனவே அடிப்படை வசதிகளுடன் கூடிய  திருமண மண்டபங்கள் உள்ளிட்ட இடங்களில் வைத்து  தொற்று உள்ளவர்களுக்கு சிகிச்சை அளிக்க வேண்டும்.

மாவட்டம் முழுவதும் பரவலாக பிசிஆர் பரிசோ தனை மேற்கொள்ள வேண்டும். இதற்குத் தேவை யான உபகரணங்களை அரசு வழங்க வேண்டும். பிசிஆர் பரிசோதனை மையம் அண்ணாமலை நகர் பல்கலைக்கழக மருத்துவக் கல்லூரியில் மட்டுமே உள்ளது. மேலும் கடலூர், விருதாச்சலத்தில் இரு  இடங்களிலும் பரிசோதனை மையங்களை உருவாக்க  வேண்டும். குறிப்பாக, மருத்துவர்கள், மருத்துவ பணி யாளர்கள், காவல்துறை, தூய்மைப் பணியாளர்கள், வியாபாரிகள் உள்ளிட்டோருக்கு முன்னுரிமை அடிப்ப டையில் பிசிஆர் பரிசோதனை செய்ய வேண்டும். ஒருசில நியாய விலைக்கடைகளில் பாமாயில், கோதுமை, துவரம் பருப்பு சில கடைகளில் வழங்கப்பட வில்லை. எனவே போர்க்கால அடிப்படையில் அனைத்து அத்தியாவசியப் பொருட்களை மக்களுக்கு  வழங்க வேண்டும். ரேஷன் கார்டு இல்லாத வர்களுக்கும் அரசு அறிவித்துள்ள பொருட்கள் மற்றும்  நிவாரணத்தை வழங்க வேண்டும்.

குறுவை சாகுபடி துவங்க உள்ள நிலையில் மாவட்டம் முழுவதும் உள்ள ஏரி, குளம், வாய்க்கால் கால்வாய்களை 100 நாள் திட்ட பயனாளிகளை பயன்ப டுத்தி மராமத்து பணிகளை செய்ய வேண்டும். என்எல்சி  நிறுவன சமூக மேம்பாட்டு நிதியை கூடுதலாக பெறுவ தற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். மகாத்மா காந்தி  தேசிய ஊரக வேலை திட்ட பணிகள் முடக்கப்பட்ட கிராமங்களைத் தவிர மற்ற அனைத்து கிராமங்க ளிலும் உடனே தொடங்க வேண்டும். ஸ்ரீராம் நிதி நிறுவனம், பஜாஜ் நிறுவனம், சுய உதவி  குழுக்கள் உள்ளிட்ட நிதி நிறுவனங்கள் மக்களிடம் கடனை கட்டாயமாக செலுத்த வேண்டும் என்று வற்பு றுத்துவதாக அறிகிறோம். இதனை தடுத்து நிறுத்த வேண்டும். கடன் வசூலிப்பை மூன்று மாத காலம் தள்ளி  வைக்க வேண்டும். தொடர் முடக்கத்தால் வேலை யில்லாமல் கஷ்டப்படும் சூழ்நிலையில் நிறுவனங்கள்  வட்டியை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும். தனியார் பள்ளி, கல்லூரிகள் மற்றும் நிறுவனங்க ளில் பணியாற்றும் ஊழியர்களுக்க மே மாதம் ஊதி யம் 50 விழுக்காடு மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. முழு  ஊதியத்தையும் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். சிறு குறு தொழில் முனைவோர் மீண்டும்  தொழில் துவங்க வங்கியின் மூலம் வட்டியில்லா கடன் வழங்க எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.