அன்னூர், மார்ச் 20- உலக நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவி வரும் நிலையில் இந்தியாவில் கோவிட் 19 வைரசை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் அரசு தரப்பில் மேற்கொண்டு வருகின்றனர். இதைத்தொடர்ந்து அன்னூர் பகுதியில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் வைரஸிலிருந்து பாதுகாத்துக் கொள்வது எப்படி என்பது குறித்து மக்களுக்கு எடுத்துரைத்தனர். அத்துடன் வைரஸ் பரவுவதை குறித்தான விழிப்புணர்வு வாசகங்கள் கையில் ஏந்தியபடி பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். இதில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் முன்னாள் மாவட்டத் தலைவர் மணிகண்டன், ஒன்றிய தலைவர் சரவணன், ஒன்றியச் செயலாளர் அர்ஜுன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிர் வாகிகள் அகமது கபீர், சுகுமார், அப்பாஸ் உள் ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.