tamilnadu

கோவை மாவட்ட ஆட்சியர் கு.இராசாமணிக்கு கொரோனா தொற்று

கோவை, ஜூலை 15- கோவை மாவட்ட ஆட்சி யர் கு.இராசாமணிக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப் பட்டுள்ள நிலையில், சிகிச் சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கோவை மாவட்டத்தில் கடந்த ஜூன் மாதம் முதல் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த வைரஸ் பரவலை கட்டுப்படுத்த மாநக ராட்சி, மாவட்ட நிர்வாகம் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இத்தடுப்பு பணிகள்  குறித்து அதிகாரிகளுடனான ஆலோசனை, கட்டுப் பாட்டு மண்டலங்களை நேரில் சென்று பார்வை யிடுதல் உள்ளிட்ட பணிகளை மாவட்ட ஆட்சியர் கு.இராசா மணி மேற்கொண்டு வந்தார். இந்தசூழலில் மாவட்ட  ஆட்சியருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப் பட்டது. இதில் அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு, கோவை அவிநாசி சாலை யில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.