சேலம், ஆக. 26- அம்பேத்கர் சிலை உடைப்புக்கு கண்டனம் தெரிவித்து பல்வேறு இடங்களில் கண்டன ஆர்ப்பாட்டங் கள், மறியல் போராட்டங்கள் நடை பெற்றன. நாகை மாவட்டம், வேதாரண்யம் பகுதியில் புரட்சியாளர் அம்பேத்க ரின் சிலையை சேதப்படுத்திய அனை வரையும் கைது செய்து அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும் என வலியுறுத்தி சேலம் மாவட்ட நீதிமன் றம் முன்பு வழக்கறிஞர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் வழக்கறிஞர் பொன்னுசாமி, இமய வரம்பன், சந்தியூர், பார்த்திபன் உள் ளிட்ட ஏராளமான வழக்கறிஞர்கள் பங்கேற்றனர். இதே கோரிக்கையை வலியுறுத்தி சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு விடுதலை சிறுத்தைகள் கட்சி யினர் நகர பொருளாளர் காஜா மைதீன் தலைமையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு கைதாகினர். மேலும், அம் பேத்கர் மக்கள் இயக்கம் சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற் றது. ஜங்ஷன் அண்ணாதுரை தலை மையில் நடைபெற்ற இந்த ஆர்ப் பாட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட் டோர் பங்கேற்றனர்.
கோவை
கோவை தெற்கு தாலுகா அலுவ லகம் முன்பு தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் சார்பில் திங்களன்று மாவட்டச் செயலாளர் வழக்கறிஞர் ஆறுச்சாமி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மாநில துணை பொதுச்செயலாளர் யு.கே.சிவஞானம், திருப்பூர் மாவட்ட செயலாளர் நந்தகுமார், சிபிஎம் கிழக்கு நகர செயலாளர் ஜாகீர், தமுஎகச மாநிலச் செயலாளர் மு.ஆனந்தன், இந்திய மாணவர் சங்க மாவட்ட செயலாளர் தினேஷ்ராஜா, பிஎஸ்என் எல் மாவட்ட செயலாளர் சி.ராஜேந்தி ரன், அம்பேத்கர் பயிற்சி மைய ஒருங்கி ணைப்பாளர் கே.கனேஷ் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்று கண்டன முழக்கங்களை எழுப்பினர். விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் மண்டல செயலாளர் சுசி.கலையரசன் தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனைய டுத்து, போராட்டத்தில் ஈடுபட்ட 20-க்கும் மேற்பட்டோர் கைது செய் யப்பட்டனர். தெற்கு தாலுகா அலுவ லகம் முன்பு திராவிடத்தமிழர் கட்சி வெண்மணி தலைமையிலும், சமூக நீதிக்கட்சி பன்னீர் செல்வம் தலை மையிலும் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. கோவை ஒருங்கிணைந்த நீதிமனறம் முன்பு அம்பேத்கர் சிலை உடைப்பை கண்டித்து வழக்கறி ஞர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பொள்ளாச்சி காந்தி சிலை முன்பு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கோவை தெற்கு மாவட்ட செயலா ளர் ச.பிரபு தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பொள்ளாச்சி வடக்கு ஒன்றிய செய லாளர் இரவிக்குமார், துணை செய லாளர் ஜி.ஆறுச்சாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
கல்வீச்சு
பாளையம் சாலை புதிய பேருந்து நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த உதகை செல்ல கூடிய அரசு பேருந்து மீதும், கவுண்டம்பாளையம் அருகே மருதமலை செல்லக்கூடிய 70 டி அரசு பேருந்து மீதும் கல்வீசி தாக்கியதில் பேருந்தின் கண்ணாடி உடைந்தது. இந்த சம்பவம் தொடர்பாக தமிழ் புலிகள் கட்சியின் மைய மாவட்ட செயலாளர் கோவை ராவணன், சாய்பாபா காலனி காவல்நிலைத்தில் சரணடைந்தார்.
நாமக்கல்
தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் சார்பில் நாமக்கல் பூங்கா சாலை முன்பு கண்டன ஆர்ப் பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செய லாளர் கே.தங்கமணி தலைமை வகித்தார். மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் எஸ்.கந்த சாமி, பி. ஜெயமணி, விடுதலை சிறுத் தைகள் கட்சியின் தலைவர் ரமேஷ், தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாவட்ட பொருளாளர் எஸ்.ஆறு முகம், மாவட்ட துணை செயலாளர் கு.சிவராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.