tamilnadu

கோவை: அரசு மருத்துவமனையில் சிறப்பு தீவிபத்து சிகிச்சை வார்டு

கோவை, நவ. 13 - தீபாவளியில் அவசர தீவிபத்து சிகிச்சைகளுக்காக கோவை அரசு மருத்துவமனையில் “ஜீரோ டிலே சிறப்பு வார்டு” வெள்ளி முதல் செயல்ப டுத்தப்பட்டுள்ளது. தீபாவளியில் பட்டாசு வெடிக்கும்  கொண்டாட்டங்களில் கவனக் குறை வினால் ஏற்படும் விபத்துகளுக்கு உட னடி சிகிச்சைக்காக கோவை அரசு  மருத்துவமனையில் தீக்காய சிகிச் சைப் பிரிவில் “ஜீரோ டிலே சிறப்பு வார்டு” அமைக்கப்பட்டுள்ளது. மேலும் தீக்காயம் ஏற்பட்டோருக்கு தேவைப்படும் முதலுதவிக்காக அவசர  சிகிச்சைப் பிரிவிலும் ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது. இதுகுறித்து மருத்துவ மனை டீன் காளிதாஸ் குறிப்பிடு கையில், எதிர்பாராத விதமாக தீபாவ ளியின் போது பல்வேறு இடங்களில் விபத்துகள் ஏற்படும். சாலைகளிலோ வீடுகளிலோ எங்கு நேர்ந்தாலும் விபத்து ஏற்பட்டோருக்கு உடனடி அவசர சிகிச்சை தேவைப்படும்.

கோவை அரசு மருத்துவமனையில் தீக்காயங்களுக்கென தனிவார்டு இருப்பினும் இப்பண்டிகை நாட்க ளில் சற்று அதிகமான தேவை ஏற்ப டும். எனவே இவற்றை கருத்தில் கொண்டு இவர்களுக்கான சிகிச்சைக் காகவே இந்த ஜீரோ டிலே சிறப்பு  வார்டு பிரத்யேகமாக ஏற்படுத்தப் பட்டுள்ளது. 20 படுக்கை வசதி கொண்ட இந்த வார்டு 24 மணி நேர மும் செயல்படும். இங்கு பணிபுரி யும் மருத்துவர்கள் தீபாவளி நாளிலி ருந்து பணியைத் துவங்குவர். அதற் கேற்றாற்போல் இவர்களுக்குத் தேவையான அறிவுரையும் வழங்கப் பட்டுள்ளது. எனவே இக்காலங்களில் பொதுமக்களுக்கு திடீர் தீ விபத்துகள் நேரும் பட்சத்தில் தாமதிக்காமல் அரசு மருத்துவமனையின் இச்சிறப்பு வார்டில் சிகிச்சை பெற்றுக் கொள்ள லாம் என கூறியுள்ளார்.