tamilnadu

img

துப்புரவு பணியை தனியாருக்கு தாரை வார்ப்பதை கண்டித்து சிஐடியு ஆர்ப்பாட்டம்

தருமபுரி, ஜூன் 24- தருமபுரி நகராட்சியில் துப்புரவு பணியை தனியாருக்கு தாரைவார்ப்பதை கண்டித்து சிஐடியு ஊரக வளர்ச்சி உள்ளாட்சித்துறை ஊழியர் சங்கத்தின் சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சிகளில் ப ணிபுரியும் துப்பரவு தொழிலாளிகளுக்கு அரசு அரசாணைப்படி தினக்கூலியாக நகராட்சி தொழிலாளர்களுக்கு ரூ.509.16, பேரூராட்சிக்கு ரூ.432.16, ஊராட்சிக்கு  ரூ.355.16.  டேங்க் ஆப்ரேட்டர்களுக்கு  ரூ.432.16 வழங்குவதுடன் 2017 ஆம்  ஆண்டு அக்டோபர் 1 ஆம் தேதி முதல் நிலுவை தொகை மற்றும் பணி ஓய்வு பெற்ற துப்புரவு தொழிலாளர்களுக்கு அர சாணைப்படி பணிக்கொடை ரூ.50 ஆயி ரம், மாத ஓய்வூதியமாக ரூ2 ஆயிரம் வழங்க  வேண்டும். நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி களில் உள்ள துப்புரவு பணியாளர் டேங் ஆப்ரேட்டர் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும்.

பல ஆண்டுகளாக பணியாற் றும் தினக்கூலி துப்பரவு தொழிலாளர் களை நிரந்தரம் செய்யவேண்டும். தொழி லாளர்களின் பி.எப் பணத்தை செலுத்தி ரசீது பெற்றுஆண்டிற்கு ஒருமுறை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திங்களன்று சிஐடியு ஊரக வளர்ச்சி உள்ளாட்சித்துறை ஊழியர் சங்கத்தின் சார்பில் தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டத் தலைவர் சி.கலாவதி தலைமை வகித்தார். மாவட்ட பொதுச் செயலாளர் ஆர்.செல் வம், பொருளாளர் வெங்கட்ராமன், சிஐடியு மாவட்ட இணைச்செயலாளர் எஸ்.சண் முகம், மாவட்ட துணை தலைவர்கள் சி. முரளி, பி.ஆறுமுகம், ஜி.வெங்கட்ராமன், சங்க நிர்வாகிகள் குட்டியப்பன், கணேசன், முருகன், முனியம்மாள், ராஜேந்திரன், சங்கர் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தின் முடிவில் மாவட்ட ஆட்சியர் எஸ்.மலர்விழியிடம் மனு அளித்தனர்.