கோவை, செப்.8– கோவை சோமசுந்தரம் சாலையில் உள்ள ஒரு கடையின் பூட்டை உடைத்து கொள்ளையர்கள் திருடும் சி.சி.டி.வி காட்சிகள் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கோவை, அவிநாசி சாலை மேம்பாலம் கீழ் பகுதியில் உள்ள சோமசுந்தரம் சாலை, காட்டூர் உள்ளிட்ட பகுதிகளில் எலக்ட் ரிக்கல் மற்றும் பம்ப்செட் என பல்வேறு தொழில்துறை சார்ந்த வணிகம் நடை பெற்று வருகிறது. பல மாநிலத்திலிருந்து அதிகம் வந்து போகும் இந்த பகுதியில் பல கோடி ரூபாய் அளவில் தினமும் வணிகம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக இந்த பகுதியில் பூட்டிய கடையை உடைத்து கடையினுள் உள்ள ரொக்க பணத்தை மட்டும் ஒரு கும்பல் கொள்ளையடித்து வருகிறது. கடந்த சில நாட்களாக தொடர்ந்து இது போன்று நடை பெற்று வருகிறது. இது தொடர்பாக காவல் துறையிடம் புகார்களும் அளிக்கப் பட்டு உள்ளது. இந்நிலையில், ஞாயிறன்று அதிகாலை சோமசுந்தரம் சாலையில் உள்ள ஒரு கடையில் மூன்று பேர் கும்பல் ஷட்டரை உடைத்து கொள்ளையடித்து செல்லும் சி.சி.டி.வி காட்சிகள் வெளியாகியுள்ளது. கடந்த கால சம்பவங்களில் தொடர்புடைய குற்றவாளிகள் யாரும் இதுவரை கைது செய்யப்படாத நிலையில் காவல்துறை மீது கடும் விமர்சனங்களும் எழுந்துள்ளன. தொடர்ந்து நடைபெறும் இந்த சம்பவங் களில் தொடர்புடைய குற்றவாளிகள் குறித்து தகவல் கிடைக்காததால் காவல் துறையினரும் அதிர்ச்சியில் உள்ளனர். மேலும், ஒரே பகுதியில் தொடர்ந்து நடை பெறும் இந்த திருட்டு சம்பவங்கள் வணி கர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற் படுத்தி உள்ளது. தற்போது வெளியாகி யுள்ள சிசிடிவி காட்சிகளை கொண்டாவது குற்றவாளிகளை காவல்துறையினர் பிடிக்க வேண்டும் என அப்பகுதி வணிகர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.