tamilnadu

img

சாதி வெறியை மாய்ப்போம் - மனிதம் காப்போம்

கோவை, ஜூலை 7– சாதி வெறியை மாய்ப்போம், மனிதம் காப்போம் என்கிற உறுதிமொழியோடு அசோக் குமார் நினைவேந்தல் நிகழ்வு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில் ஞாயிறன்று  பல்வேறு இடங்களில் நடை பெற்றது.  சாதி, மதவெறிக்கெதிராகவும், மனித நேயத்தை வலியுறுத் தியும், மக்களின் அடிப்படை பிரச்சனைகளுக்காக போராடி யவர் தோழர் அசோக்குமார்.  இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் நெல்லை மாவட்டத் தின் நிர்வாகியாக செயல்பட்ட அசோக்குமார் சில தினங்களுக்கு முன்பு சாதிய வெறியர்களால் வெட்டிப் படுகொலை செய்யப் பட்டார். தமிழகத்தையே அதிர்ச் சிக்குள்ளாக்கிய இச்சம்பவத்தை யடுத்து நாடு முழுவதும் வாலிபர் சங்கம் சார்பில் சாதிய வெறிக் கெதிரான உறுதிமொழியேற்பு நிகழ்வு நடைபெற்று வருகிறது. இதன்ஒருபகுதியாக கோவையில் பல்வேறு இடங்களில் அசோக் குமார் நினைவேந்தல் நிகழ்வும் சாதிவெறியை மாய்ப்போம், மனிதம் காப்போம் என்கிற உறுதி மொழியேற்பு நிகழ்ச்சி நடை பெற்றது. இதில் வாலிபர் சங்கத் தின் மாவட்ட தலைவர் ஸ்டாலின், மாவட்ட செயலாளர் கே.எஸ்.கனகராஜ், மாவட்ட பொருளாளர் சந்திரசேகரன் மற்றும் ஒன்றிய, நகர நிர் வாகிகள் பங்கேற்றனர்.

அவிநாசி

அவிநாசியை அடுத்த முத்து செட்டிபாளையத்தில் நடை பெற்ற நிகழ்வில் வடிவேல், பன்னீர்செல்வம் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். மேலும் திருமுருகன்பூண்டி பேரூராட்சி, அவிநாசி ஒன்றியம் போன்ற பல்வேறு பகுதிகளில் நினை வேந்தல் நிகழ்ச்சிகள் நடை பெற்றன.